Saturday, January 11, 2020

தோழர் சு.வெவிற்கு விருது. பொறாமையில் சிலர்




கனடாவில் செயல்படும் இலக்கியத் தோட்டம் அமைப்பு தமுஎகச மாநிலத் தலைவரும் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு "இயல் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்க உள்ளது.

வாழ்த்துக்கள் தோழர் சு.வெ.

ஒரு படைப்பாளியாகவும் களப் பணியாளராகவும் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே மக்களவை உறுப்பினராக முத்திரை பதித்து வரும் தோழர் சு.வெ இந்த விருதிற்கு மிக மிக பொருத்தமானது.

தோழர் சு.வெ விற்கு காவல் கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த போதே சில இலக்கிய வாதிகள் பொறாமையில் புழுங்கி புலம்பினார்கள்.

வேள்பாரி நாவலுக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் கிடைத்த சிறப்பான வரவேற்பு அந்த பொறாமைத் தீயை வளர்த்தது. மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு கிடைத்த போது கிட்டத்தட்ட மாரடைப்பு வராத குறைதான். அவர் தோற்றுப் போக வேண்டும் என்ற அவர்களின் பிரார்த்தனை பொய்த்துப் போனதில் கிட்டத்தட்ட செத்துப் போனார்கள்.

இப்போது கனடா நாட்டு இயல் விருது கிடைத்ததும் அவர்களால் தாங்கவே முடியவில்லை.

அதிலும் தேவிபாரதி என்ற பெயரில் எழுதும் ராஜசேகரன் அவர்கள் இன்று முக நூலில் எழுதிய பதிவு அநாகரீகத்தின் உச்சம்.  தன் குடும்பப் பிரச்சினையைப் பற்றி முக நூலில்  பக்கம் பக்கமாக எழுதி அனுதாபம் தேட முயற்சித்த ஒரு நபர் அவர். படைப்பாளி என்று அழைக்கப்படுவதற்கான அருகதையை அந்த பதிவு மூலம் சுத்தமாக இழந்து விட்டார்.

அவரை நியாயப்படுத்த பின்னூட்டமிட்ட பலரின் கருத்துக்களும் அவருடையது போலவே கேவலமாகவே இருந்தது. இடதுசாரிகள் மீதான காழ்ப்புணர்வு என்பதைத் தாண்டி அக்கருத்துக்களில் எதுவும் இல்லை. அந்த பதிவை பகிர்ந்து கொண்ட ஒரு நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருவரிடம் ஒரு தோழர் “எந்த விதத்தில் தேவி பாரதியின் எழுத்து சு.வெங்கடேசனை விட மேம்பட்டது?” என்று கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் சுவாரஸ்யமானது. “அதெல்லாம் எனக்கு தெரியாது. சு.வெ ஒரு வடுக வந்தேறி. அவ்வளவுதான்”

இன்னொருவர் சொல்கிறார்

“சுவெ எழுதுவது வெகு ஜன எழுத்து”

அவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான்.

அடப்பாவிகளா, மக்களுக்கு புரியாத படி எழுதி நீங்கள் என்ன கிழித்தும் என்ன பயன்? மக்களுக்கு புரியாத உங்கள் இலக்கியம்தான் குப்பை.  கர்னாட சங்கீதத்தைப் போல இலக்கியத்தையும் சிறை வைத்து விடாதீர்கள்”

வேள்பாரி போல ஒரு காவியத்தை படைக்க முடியாதவர்களின் பொறாமை, புலம்பல் கடைசியில் சாபமிடும் அளவிற்கு கொண்டு விட்டது.

பாவம் கையாலாகாதவர்களின் புலம்பல் என்று அனுதாபப்படத்தான் தோன்றுகிறது.

No comments:

Post a Comment