Saturday, January 27, 2018

ஷேக் சலீமிடம் மன்னிப்பு கேளுங்கள் . . .

ஷேக் சலீம் 

இந்த பெயர் நினைவில் உள்ளதா?




அமர்நாத் யாத்திரை சென்ற குஜராத் பயணிகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தன் உயிரை பணயம் வைத்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பாதுகாத்த பேருந்து ஓட்டுனர்.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, குஜராத் அரசு ஆகிய பாஜக  அரசுகள் அவரை பாராட்டின. 

ஆனால் ஹெச்.ராசா போல ஏராளமான உதவாக்கரைகள் அந்த மனிதன் மீது விசாரணை நடத்த வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஆவேசமாக கூச்சலிட்டனர்.

காரணத்தை நான் தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

இப்போது அந்த மனிதருக்கு மத்தியரசே வீர தீரச் செயலுக்கான
"உத்தம் ஜீவா ரக்சக் பதக்"  என்ற விருது வ்ழங்கியுள்ளது.

அபாண்டமாக பழி போட்டதற்கு,
அதுவும் மதத்தின் காரணமாக இழிவு படுத்தியதற்கு

ஷேக் சலீமிடம்

ஹெச்.ராசா வகையறாக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்


No comments:

Post a Comment