Monday, January 22, 2018

தோழர்டா !!!!!


ஏழை மக்களுக்கு நியாயம் கேட்டதால் திருப்புவனம் காவல்துறையால் வெறித்தனமாக தாக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் தோழர் மு.கந்தசாமி அவர்களின் இரண்டு முகநூல் பதிவுகள் பார்த்து மெய்சிலிர்த்துப் போனேன். அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

தோழர்டா !!!!!!




அடிவாங்கலாம்
மக்களுக்கான போராட்டத்தில் ..
-----
என் நினைவு தெரிய
என் தகப்பன் என்னை 
ஒரு நாளும் அடித்தில்லை
ஒரு வார்த்தையேனும்
கடிந்து பேசவே
என் தகப்பனை அனுமத்திக்காத
என் தாய்
என் மீது அடி விழ
நிச்சயம்
அனுமதிருக்கமாட்டாள்

இதை நான் குழந்தைகளிடம்
அடிக்கடி பெருமையாக
சொல்லி மகிழ்வதை
என் துணைவியார்
மருத்துவமனையில் என்னை பார்க்க வந்த தோழர்களிடம் ,நண்பர்களிடம்
சொல்லி சொல்லி துடித்த போது
கலங்கிவிட்டேன் .
அதே தாய் மருத்துவமனையில்
என்னை பார்த்து துடித்தபோது
என்னால் தாங்கமுடியவில்லை தான்
அழுதுவிட்டு சொன்னாள்
போலிஸ் அடித்ததும்
நீ அடிவாங்கியதும் மவனே
மக்களுக்காக தானே
என்றதும்
அடிவாங்கலாம்
மீண்டும் மீண்டும்
அடிவாங்கலாம் ..

உன் லத்தி என்னை
என்னை என்ன செய்யமுடியும் ?
-
"உண்டியல் குழுக்கி ,
என்னடா பன்னுவீங்க, 
பத்..திருபது பேர் கொடி பிடுச்சு
கத்து வீங்க ,
காக்கி சட்டை அதிகாரம் தெரியுமாடா " என சொல்லி சொல்லி
நான்கு பேர் கையையும் காலையையும் பிடித்துக் கொண்டு கோழையாய்
உன் வீராப்பை காட்டினாய்
அப்போதே சொன்னேன்
கம்யூனிஸ்ட்கள் பற்றி உனக்கு தெரியும்

நீ அடி
எவ்வளவு வேண்டாலும் அடி
கம்யூனிஸ்டகள் பற்றி
இனி நீ தெரிஞ்சுக்குவ என்றேன்
ஆயிரமாயிரம் தோழர்களின்
ஆவேச குரலில் இப்பவே நடுங்குகிறாய்
காலை பிடிக்கவா கையை பிடிக்கவா
என தொடை நடுங்கி
நீ கெஞ்சும்போதே
உன் காக்கி திமீரும்
காவி அரசியலும் செத்துபோச்சு
என்று..
நானோ
முன்னிலும் வேகமாக
செயல்பாட்டுக்கான களத்திற்கு
என் கட்சி காட்டும் பாதையில்
கம்பீரமாக நடைபோட
தயாராகிவிட்டேன்
ஏனெனில்
நான் ஒரு கம்யூனிஸ்ட்
உன் லத்தி என்னை
என்ன செய்ய முடியும்
போடா ..

No comments:

Post a Comment