Friday, September 29, 2017

இதுதான்யா யதார்த்தம் வெங்காயம்!!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு வந்த ஒரு வாழ்த்துச் செய்தி.

அது இங்கே தமிழிலே

இந்த அஷ்டமி அன்று
எந்த ஒரு துர்க்கையும் கருக்கொலை செய்யப்படாமல் இருக்க,
எந்த ஒரு சரஸ்வதியும் கல்வி கற்க பள்ளிக்குச் செல்வது தடுக்கப்படாமல் இருக்க,
எந்த ஒரு லட்சுமியும் தன் தேவைக்காக கணவனிடம் பிச்சையெடுக்கும் நிலை வராமல் இருக்க,
எந்த ஒரு பார்வதியும் வரதட்சணைக்காக எரியூட்டப்படாமல் இருக்க,
எந்த ஒரு காளியும் "ஃபேர் & லவ்லி" ட்யூப், ட்யூபாக முகத்தில் பூசிக் கொள்ளாமல் இருக்க

பிரார்த்திப்போம் 

துர்க்கைதான் அக்காலத்தில் பாதுகாப்பு மந்திரி,
லட்சுமிதான் நிதி மந்திரி

என்றெல்லாம் கதையளந்த வெங்காய நாயுடுவுக்கு,
இதுதான் யதார்த்தம் என்று சொல்லிக் கொள்கிறேன்.



பி.கு : துணை ஜனாதிபதியை வெங்காயம் என்று சொல்லலாமா என கொதிப்பவர்கள் யாராவது இருந்தால் அவர்கள்

ஹமீது அன்சாரியை வெங்காய நாயுடு, மோடி, ராம் மாதவ் உள்ளிட்ட பாஜககாரர்கள் அசிங்கப்படுத்தியபோது கொந்தளித்தார்களா 

என்றும்

ஜனாதிபதியை தின மலர் போன்ற பத்திரிக்கைகள் "கோவிந்து" என்றே அழைத்துக் கொண்டிருப்பதற்கு கொந்தளித்தார்களா

என்பதையும் ஆதாரத்தோடு நிரூபித்து 

பிறகு கொந்தளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

4 comments:

  1. அந்த வெங்காயத்துக்கு இந்த மரியாதையே அதிகம். சகுனிப்பய

    ReplyDelete
  2. வெங்காயத்தை குறைத்து மதிப்பிடுவது கண்டனத்துக்குறியது. I mean onion,

    ReplyDelete
  3. ஹமீது அன்சாரியை வெங்காய நாயுடு, மோடி, ராம் மாதவ் உள்ளிட்ட பாஜககாரர்கள் அசிங்கப்படுத்தியபோது கொந்தளித்தார்களா **** former VP has been known to be a highly biased person to his religion and people. After his term ended he made his evil intention open. As chairman of Rajyasabha he was always allowing, supporting and abetting unruly rogues from congi and commies to obstruct govt. official business. He is an obedient Italian slave.

    ReplyDelete
    Replies
    1. பெரியவரே, ஹமீது அன்சாரியை நீண்ட நாட்களாக அசிங்கப்படுத்தியுள்ளார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் உங்களுக்கெல்லாம் உருவான தீய எண்ணம் தவிர வேறு காரணம் எதுவுமில்லை.

      சரி, இப்போது ராம்நாத் கோவிந்த் காவி அடிமைதானே. அவரை கோவிந்து
      என்று அசிங்கப்படுத்துவதை ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்? நீங்களும் புத்திசாலித்தனமாக அதற்கு பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அப்படி அவரை அசிங்கப்படுத்துவதை நீங்களும் ஏற்கிறீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம்தான்.
      அவர் தலித்

      Delete