Thursday, September 14, 2017

கொலையெல்லாம் ஒரு மேட்டரா. . .

சற்று நேரம் முன்பு வீடு திரும்புகையில் காகிதப்பட்டறை பகுதியில் உறியடி திருவிழா என்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. 

இரண்டு வருடங்கள் முன்பாக இதே பகுதியில் வேலூரின் ஒரு பெரிய தாதாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலை செய்ய முயற்சி செய்த நபரை தாதாவின் ஆட்கள் துரத்திக் கொண்டு ஓட, ஒரு கட்டத்தில் அவன் சிக்கிக் கொள்ள தாதாவின் இரு மகன்கள் கல்லை முகத்தில் போட்டு கொன்று விட்டார்கள். அந்த கொலை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அதிலே ஒரு படம் கீழே உள்ளது. முகங்களை, சடலத்தை நான் மறைத்துள்ளேன்.


அந்த தாதாவும் சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்ட ஆட்களின் கோஷ்டியால் கொல்லப்பட்டு விட்டார்.

போக்குவரத்து நெரிசலின் போது சாலையின் இருபக்கமும் கட்டப் பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பேனர்களைப் பார்த்தேன்.

கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்த அந்த இரண்டு மகன்களும் பேனர்களில் மீசையை முறுக்கிய படி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

பின் குறிப்பு : ஒரு ஜாதி சங்கம் பெயரில் அந்த பேனர்கள் வைக்கப் பட்டிருந்தது.

 

No comments:

Post a Comment