Friday, September 15, 2017

பெருமையாய் உள்ளது மணி. சூப்பர்



வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல்
பதிவிலிருந்து எடுத்தது. 


இன்று சிறார் நீதிமன்றத்தில்...

நீதிபதி:- NEETக்கு எதிராக போராடினீர்களா?

இளம்தோழர்:- ஆம்

நீதிபதி:- ஏன் எதிர்க்கிறீர்கள்?

இளம்தோழர்:- நீட் என்னைப்போன்ற மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு அநீதியளிக்கிறது.

நீதிபதி: அப்ப உங்க மாநில பாடதிட்டம் தரமாக இல்லையா?

இளம்தோழர்: அப்படியெல்லாம் இல்ல. சிபிஎஸ்இ ல படிக்க வைக்கறவங்க காசு செலவு செய்து தனியா கோச்சிங் கொடுப்பாங்க. எங்களுக்கு யார் செலவு செய்வாங்க?

நீதிபதி:- அப்படியெனில் உங்க படிப்புக்கு கோச்சிங் சரியில்ல.

இளம்தோழர்:- அப்படியில்ல. நாங்களும் நன்றாக படித்து மார்க் எடுத்தோம்..நீட்டில் வெறும் 10% மட்டுமே எங்கள் பாடத்திட்டத்தில் இருந்து கேள்வி கேட்டால் எப்படி சரியாகும்?

நீதிபதி:- நீங்க முன் வைக்கும் தீர்வு என்ன?
இளம்தோழர்: நீட்டை நீக்கனும்.

நீதிபதி:- இனிமே போராடுவீங்களா?

இளம்தோழர்:- நீட்டை நீக்கும்வரை போராடுவோம்.

நீதிபதி:- என்ன படிக்கிறீங்க?
இளம்தோழர்:- பி.காம்

நீதிபதி:- அதன்பின் என்ன படிக்க போறீங்க?

இளம் தோழர்:- பி.எல் படிப்பேன்.

நீதிபதி:- அப்பா அம்மா என்ன வேலை செய்கிறார்கள்? அவர்களுக்கு நீங்க போராடியது?

இளம் தோழர்:- அப்பா கூலி, அம்மா வீட்டுவேல. அவங்களுக்கு தெரியும்.
நீதிபதி:- நீங்க பி.எல் படிங்க!

மணிக்குமாருக்கு ரெட் சல்யூட்...

நெஞ்சுரத்தோடு நீதிமன்றத்தை சந்தித்த தோழன் மணியை நினைத்தால் பெருமையாக உள்ளது. சூப்பர்.

1 comment:

  1. Mani is a living example for the thirukural "Nallar oru ularel avar porttu ellorukkum peyyum mazhai." Kudos to him. Sorry sir, problem with Tamil typing in my system. Trying to rectify it.

    ReplyDelete