Saturday, December 12, 2015

கேரளாவிலிருந்து இரண்டு கோடி ரூபாய்





வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவுவதற்காக நேற்று (11.12.2015) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரள மாநிலம் முழுவதும் உண்டியல் வசூல் இயக்கம் நடத்தியது.

மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுச் செயலாளர் தோழர் கொடியேறி பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர் பினராயி விஜயன், தோழர் எம்.ஏ.பேபி, மற்றுமுள்ள மத்தியக்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் நேரடியாக களத்தில் இறங்கி வசூலில் ஈடுபட்டனர்.

நேற்று நடந்த ஒரு நாள் வசூலில் மட்டும் கேரள மக்கள் ரூபாய் இரண்டு கோடியே ஆறு லட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து இருநூற்றி நாற்பத்தி மூன்று ரூபாய்.

மாவட்டவாரியான விபரங்கள் கீழே உள்ளது.

மாவட்டம்
தொகை
மாவட்டம்
தொகை
காசர்கோடு
3,50,000
இடுக்கி
6,15,000
கண்ணூர்
21,71,793
கோட்டயம்
13,02,437
வயநாடு
3,00,000
ஆலப்புழா
10,05,536
கோழிக்கோடு
24,34,689
பத்தனம்திட்டா
7,50,000
மலப்புரம்
16,34,000
கொல்லம்
12,00,000
பாலக்காடு
15,02,047
திருவனந்தபுரம்
15,18,223
திருச்சூர்
27,00,073
மாநிலக்குழு பங்களிப்பு
10,00,000
எர்ணாகுளம்
21,35,845
மாநிலக்குழு அலுவலகத்திற்கு
நேரடியாக வந்தது
16,600

எல்லைகள் அற்ற அன்பின் வெளிப்பாடு இது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவிற்கும் மனமுவந்து நிதியளித்த கேரள மாநில மக்களுக்கும் வாழ்த்துக்கள். 


1 comment: