Tuesday, September 4, 2012

வண்ணக் கோலங்கள் - அவசியம் பாருங்கள், செய்தியை படியுங்கள்

எல்.ஐ.சி நிறுவனம் முதல் செப்டம்பர் அன்று உருவானதை ஒட்டி
இன்சூரன்ஸ் வார விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாடு
முழுவதும் அனைத்து தரப்பு ஊழியர்களாலும் முகவர்களாலும்
உற்சாகமாக கொண்டாடப்படுவது  இதன் சிறப்பு. எல்.ஐ.சி 
நிறுவனத்தின் சிறப்பே அதன் அர்ப்பணிப்பு உணர்வு மிக்க
ஊழியர்கள், அதிகாரிகள், முகவர்கள்தானே.

இன்சூரன்ஸ் வார விழாவை ஒட்டி எங்கள் வேலூர் கோட்ட
அலுவலகத்தில் ஊழியர்களுக்காக நடைபெற்ற ரங்கோலி
போட்டியில் ஊழியர்கள் வரைந்த ரங்கோலி வண்ணக்
கோலங்களை கீழே பாருங்கள்.



















 கோலங்கள் மிக அழகாக உள்ளனவா?

இவ்வளவு கலைநயத்தோடு எங்கள் ஊழியர்கள் வரைந்துள்ளனர்
என்ற பெருமிதத்தோடு இவற்றை இங்கே பதிவிட்டுள்ளேன். 

அது மட்டுமல்ல, கோலங்களை உன்னிப்பாக பாருங்கள்.
இவை வெறும் அழகுப் படைப்புக்கள் மட்டுமல்ல, 
ஊழியர்கள் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நேசத்தையும்
வெளிப்படுத்துகின்றது அல்லவா?

எல்.ஐ.சி யின் பெருமைகளை ஒவ்வொரு ஓவியமும்
மிக அழகாய் உணர்த்துகின்றது அல்லவா?

ஆம் என்பதை நிச்சயம் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்
என்று எனக்கு தெரியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா?

ஒவ்வொரு கோலத்தையும் இருவர் கொண்ட அணி
உருவாக்கியது. கலந்து கொண்ட பத்து பேரில் 
ஐவர் பெண் ஊழியர்கள், ஐவர் ஆண் ஊழியர்கள்.

கோலம் என்றால் அது பெண்களுக்கானது என்று
இல்லாமல் ஆண்களும் கலந்து கொண்டது 
எவ்வளவு சிறப்பானது.

இரண்டு அணிகளில் முழுமையாக பெண்கள்.
இரண்டு அணிகளில் முழுமையாக ஆண்கள்.
ஒரு அணியில் ஆண் ஒருவர், பெண் ஒருவர்.

மேலே கொடுக்கப்பட்ட கோலங்களில் 
இரண்டாவது மற்றும் மூன்றாவது கோலங்கள்
முழுமையாக ஆண்களால் உருவாக்கப்பட்டது.

இந்த சிறப்பும் எல்.ஐ.சி க்கு மட்டுமே உரியது.

 

No comments:

Post a Comment