தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக தோழர் களப்பிரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துடிப்பு மிக்க தோழர் ராஜனாக அறிமுகமானவர். தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். தொழிற்சங்க தளத்தில் பணியாற்றுவதை விட கலை, பண்பாட்டு தளத்தில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காண்பித்தார். அதன் தொடர்ச்சியாய் ஒரு முக்கியமான அமைப்பின் முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர். அதில் காஷ்மீர் பயண அனுபவமும் பாகிஸ்தான் பயண அனுபவமும் மிக முக்கியமானது.
அவரது தலைமையில் தமுஎகச புதிய சிகரங்களை அடையட்டும்.
வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன் . . .
அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .
பிகு : மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில் 2013 ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலூர் கலை விழாவின் போது எடுக்கப்பட்டவை.
No comments:
Post a Comment