Wednesday, December 17, 2025

கேவலமான பின்னூட்டத்திற்கு சூடான பதில்

 


சங்கிகள் ராஜஸ்தானில் நிகழ்த்திய வந்தேமாதர காமெடி பற்றிய பதிவில் ஒரு அனாமதேயம் "அவங்க முட்டாப்பசங்க" என்று பின்னூட்டமிட அதற்கு இன்னொரு பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்தது. "உண்டியல் குலுக்கி கோஷ்டிகள் பற்றியும் தெலுங்கு தேவதாசி கோஷ்டி பற்றியும் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுதான் நான் பிரசுரிக்காத அந்த பின்னூட்டம்.

நாங்கள் உண்டியல் குலுக்கிகள் என்ற பட்டத்திற்காக என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்காக போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டுகிறோம். இது வெளிப்படையானது. 

பாஜக போல அமலாக்கப் பிரிவை அனுப்பி விட்டு பின்பு அந்த முதலாளிகளிடம் பணத்தை பறிக்கும் கொள்ளைக்காரக் கட்சி அல்ல கம்யூனிஸ்டுகள். அடுத்து திமுக கொடுத்த பத்து கோடி என்று ஒரு அனாமதேய கோஷ்டி வரும். அது நன் கொடை. முறையாக கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பணம்.  உண்டியலை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம்? யாரெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பட்டியல் போட்டால் "மனம் புண்பட்டு விட்டது " என்று புலம்பும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன்.

கலைஞர் குடும்பத்தை இழிவு படுத்த சங்கிகளும் அதிமுகவினரும் ட்ம்ப்ளர்களும் இப்போது தவெக தற்குறிகளும் பயன்படுத்துகின்ற அவதூறு.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கட்டமைத்து அந்த பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் பரப்பி அவர்களே  உண்மை என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எனக்கும ஏற்கக் கூடிய அதே நேரம் நிராகரிக்க வேண்டியது என்று இரண்டும் உண்டு. ஆனால் அவருடைய தமிழ் உணர்வையோ தமிழுக்கான பணிகளையோ யாராலும் நிராகரிக்க முடியாது. அவரது தமிழறிவின் நிழல் அளவு  கூட எம்.ஜி.ஆரை சொல்ல முடியாது என்ற கையாலாகத தனம், இந்த பிரச்சாரத்தின் பின்னணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பூர்வீகத்தை ஆராய்வது போல ஒவ்வொருவருடைய பூர்வீகத்தை ஆய்வு செய்தால் அது ஆப்கானிஸ்தானத்தை தாண்டிச் செல்லுமல்லவா! நம் எல்லோரின் பூர்வீகமுமே ஆப்பிரிக்க மூதாய்தானே!

தேவதாசி முறை என்பது இந்திய சமூகத்தின் இழிவு. மன்னராட்சிக் காலத்தின் திமிர். ஆதிக்க சக்திகளின் வெறிக்கு சில குறிப்பிட்ட சமூகங்களை பலியாக்கிய கொடுமை. 

தேவதாசி முறை தடைச்சட்டத்தை சட்டமன்றத்தில்  காமராஜரின் குரு சத்தியமூர்த்தி எதிர்க்கிறார். தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி  டாக்டர் முத்துலட்சுமி "இம்முறை புனிதமானது, புண்ணியம் அளிப்பது என்றால் இனிமேல் உங்கள் குடும்பப் பெண்களை பயன்படுத்துங்கள்" என்று பதிலளிக்க அவர் வாயடைத்துப் போனார்.

அந்த சமூக இழிவை ஒரு குடும்பத்தை இழிவு படுத்த பயன்படுத்துவது என்பது கேவலமான சிந்தனை. அழுகிப்போன ஜாதிய மேட்டிமை புத்தி. ஆணாதிக்க திமிர்.

அந்த அனாமதயேத்திற்கு முடிவாக ஒன்றை சொல்கிறேன்.

நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன் என்று உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லவும். 

உனக்கு அவர்களிடமிருந்து செருப்படி நிச்சயம். . .

பிகு" கடைசி இரண்டு பத்திகள் அந்த ஆங்கில அனாமதேயத்திற்கு மட்டுமல்ல, அதே போல அவதூறு பரப்பும் அனைத்து ஜந்துக்களுக்கும் பொருந்தும். 



No comments:

Post a Comment