
கடந்த செவ்வாயன்று ட்ரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளார்.
அந்த தொலைபேசி பேச்சு பற்றி ட்ரம்ப் சொன்னது
"நாங்கள் இருவரும் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினோம். ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசினாலும் கூட வர்த்தக பேரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார். ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, பாகிஸ்தானுடன் போர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினோம்"
இது ட்ரம்ப் கூறியது.
அதுவும் எங்கே? யாரிடம்?
வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கு அளித்த தீபாவளி விருந்தின் போது.
ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு விட்டது என்று இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை ட்ரம்ப் கூறினாலும் இந்தியா அது பற்றி வாய் திறக்கவேயில்லை என்று ஆங்கில இந்து நாளிதழ் சொல்கிறது.
மோடி என்ன சொல்கிறார்?
தீபங்களின் திருவிழாவான இன்று நம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் உலகெங்கும் நம்பிக்கை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து அனைத்து வடிவிலுமான தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம்"
இதிலே யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?
இரண்டு பேர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். இரண்டு பேர் சொல்வதும் பொய்யாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் அடிப்படையில் இருவருமே பொய்யர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள், சந்தர்ப்பவாதிகள், மோசடிப்பேர்வழிகள்.
இரண்டு நாட்டு மக்களைக் குழப்ப இருவருமே பேசி வைத்துக் கொண்டு கூட பொய் சொல்லியிருக்கலாம்.
ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லும் தைரியம் மோடிக்கு வராத வரை ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரி அப்படி மோடி சொல்லி விட்டால், மோடி உண்மையை பேசுகிறார் என்று ஒப்புக் கொள்வீர்களா என யாராவது அனாமதேயம் கேட்கலாம்.
அப்படி மோடி தைரியமாக சொல்லட்டும்.
அதற்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"
Rubbish publish
ReplyDeleteஅய்யா அனாமதேயம் எது ரப்பிஷ்? பாவம் உமக்குத்தான் மோடி பற்றியும் ட்ரம்ப் பற்றியும் தெரியவில்லை
ReplyDelete