மகளிர் சட்டம் அமலானால் பெண்களுக்கு உரிய இடம் கிடைத்திடும் என்று திருப்பதியில் ஒரு கூட்டத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.
சரி சபாநாயகரே, அந்த மகளிர் சட்டம் எப்போ அமலாகும்?
மக்கட்தொகை கணக்கெடுப்பு நடந்து அதன் பின்பு தொகுதி சீரமைப்பு செய்து அதன் பின்பு பெண்களுக்கான தொகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டு பிறகு ஒதுக்கப்படும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
மக்கட்தொகை கணக்கெடுப்பு எப்போது நடக்கும்?
தெரியாது.
மக்கட்தொகை கணக்கெடுப்பே எப்போது நடக்கும் என்று தெரியாத நிலையில் அது எப்போது துவங்கி, எப்போது முடிந்து அதன் பின்பு எப்போது தொகுதி சீரமைப்பு நடந்து பின் எப்போது மகளிருக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்?
மொத்தத்தில்
மகளிர் இட ஒதுக்கீடு வரும், ஆனால் வராது . . .
No comments:
Post a Comment