Wednesday, November 13, 2019

சீ.சீ.சாமியார் ப்ளான் என்னவோ?


அனைத்து அரசுப் பள்ளிகளையும் தனியார்மயமாக்க வேண்டும் என்று திருவாளர் சீ.சீ.ரவிசங்கர் சாமியார் திருவாய் மலர்ந்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்கள்தான் நக்ஸலைட்டுகளாக மாறுகிறார்களாம். தனியார் பள்ளி மாணவர்கள் அடக்க ஒடுக்கமான ஒழுக்கமானவர்களாம்.

எத்தனை மாணவர்களை ஆராய்ச்சி செய்து சீ.சீ.சாமியார் இதனை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.

ஆனால் இப்படி சொல்வதன் பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது. என்னமோ திட்டம் இருக்கு.

ஏற்கனவே இந்த கேடு கெட்ட அரசு கொண்டு  வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை கோடிக்கணக்கான ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கப் போகிறது.

இந்த போலி சொல்வது போல அரசுப்பள்ளிகளை தனியார்மயமாக்கி விட்டால் ஏழைகளுக்கு கல்வி இல்லை என்ற நிலை வந்து மனுதர்மம் நிலை நாட்டப்படும்.

அது மட்டுமல்ல

அரசுப்பள்ளிகளின் நிலம், கட்டிடம், மைதானங்கள் இவற்றையெல்லாமும் ஆட்டையைப் போட்டு விடலாம் அல்லவா!

ஆமாம்

யுமுனையையே முடக்கிய கிரிமினல் அல்லவா இவன்!
அதற்கு ராணுவத்தை கூலிப்படையாக அனுப்பிய கிரிமினல் அரசல்லவா இது? 

No comments:

Post a Comment