Wednesday, July 9, 2025

முட்டாள் சங்கிகளின் உலகமே!

 


காலையில் எழுதிய பதிவில் தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி இன்றைய வேலை நிறுத்தம் தொடர்பாக திமுகவை திட்டி எழுத மற்ற மூடச்சங்கிகளும் அப்படியே அதை வழி மொழிந்திருந்தனர். 

அதிலே ஒரு அடிமுட்டாள் சங்கி, இந்த வேலை நிறுத்தமே, சமீபத்திய கொலையை திசை திருப்ப திமுகவின் ஏற்பாடு என்று எழுதி இருந்தது.

இது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தம் என்பதோ முதலில் 20.05.2025 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டதோ பின்பு 20.07.2025 என ஒத்தி வைக்கப்பட்டதோ தெரியாமல் அவர்கள் கட்டமைத்த பொய் உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

அந்த அடி முட்டாளுக்கு பதில் போட்டு அவருடைய கருத்து சிறுபிள்ளைத் தனமானது, முட்டாள்தனமானது என்று சொன்னேன்.


எந்த பதிலும் சொல்ல முடியாமல் பதுங்கி விட்டார்கள், பதிவெழுதிய சிகண்டி உட்பட...

No comments:

Post a Comment