சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துக்கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட பதிவையும் காணொளியையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இந்திரா காந்தி 1966-1977 மற்றும் 1980-1984 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்தார். இந்த காலத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தொடங்கப்பட்டு, ஆரம்பகட்ட வளர்ச்சியில் இருந்தது. 1983இல் இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் ஷர்மா, சோவியத் யூனியனின் சோயூஸ் T-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணித்தார். இது இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல்கல்.
ராகேஷ் ஷர்மா விண்ணில் இருந்தபோது, இந்திரா காந்தி அவருடன் தொலைபேசி மூலம் உரையாடினார். இந்த உரையாடல் இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவத்தையும், தேசிய பெருமையையும் வெளிப்படுத்தியது. இந்திரா காந்தி, ராகேஷ் ஷர்மாவிடம், "விண்ணில் இருந்து இந்தியா எப்படி தெரிகிறது?" என்று கேட்டார். அதற்கு அவர், "சாரே ஜஹான் சே அச்சா" (எல்லா உலகங்களிலும் மிகச் சிறந்தது) என்று பதிலளித்தார்.
மோடி விண்வெளியில் இருக்கும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் உரையாடு காணொளியை உற்சாகமாக பார்க்க தொடங்கினேன், அதில் மோடி நீ உன்னுடன் கொண்டு சென்ற கேரட் ஹல்வாவை சாப்பிட்டாயா என்று பேசியது, லேப்டாப்பை மூடி வைத்து விட்டு வேறு வேலைகள் நிறைய கிடக்கும் என்று இடத்தை காலி செய்தேன்.
..
No comments:
Post a Comment