Saturday, April 16, 2016

சங்கராச்சாரியாரே, கொஞ்சம் வாயை மூடறீங்களா?




துவாரகா சங்கர பீடத்தின் சங்கராச்சாரியராம் இவர்.
பெயர் ஸ்வரூபானந்தா சரஸ்வதி.

போன வாரத்தில் இவர் உதிர்த்த இரண்டு முத்துக்கள்.

உத்தர்கண்டில் நடந்த வெள்ளப்பேரழிற்குக் காரணம் அந்த பகுதிக்கு பலர் தேனிலவிற்கு வருவதுதானாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனிஸ்வரன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதால் இனி பாலியல் வன் கொடுமைகள் அதிகமாகுமாம்.

மனிதன் வாய் திறந்தால் வருவதெல்லாம் வக்கிரமான கருத்துக்கள்தான். 

ஷீரடி சாய்பாபா ஒரு முஸ்லீம் பக்கிரி என்பதால் அவரை யாரும் வழிபடக் கூடாது என்று சொல்லி பக்தர்களிடமே வாங்கிக் கட்டிக் கொண்டவர்தான் இவர்.

இது போன்ற பிற்போக்குத்தனமானவர்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம். 
 

 

No comments:

Post a Comment