Saturday, April 23, 2016

வேறு யார் பொருத்தம்?





இலக்கியங்களில் காவிரி பற்றி சொல்லப்பட்டுள்ளதா?
வரலாற்றில் காவிரி பற்றி என்ன பதிவாகியுள்ளதா?
காவிரி எங்கே எப்படி தொடங்கி எதுவரையில் ஓடுகிறது?
பேச்சுவார்த்தைகள் மூலம் நதி நீர் பிரச்சினைகள் எங்காவது தீர்ந்துள்ளதா?
காவிரி கர்னாடகாவிலும் தமிழகத்திலும் எவ்வளவு தூரம் ஓடுகிறது?
தமிழகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
கர்னாடகத்தில் முன்பு காவிரி மூலம் பாசனம் செய்யப்பட்ட நிலப்பரப்பின் அளவு என்ன? உற்பத்தியின் அளவு என்ன?
காவிரி பிரச்சினை எப்போது தொடங்கியது? அது முற்றியது எவ்வாறு?
காவிரிப்பிரச்சினையில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் மைசூர் அரசின் நடவடிக்கைகள் என்ன? அப்போது தமிழக நிர்வாகப் பொறுப்பில் இருந்த வெள்ளை அரசு என்ன செய்தது?
சுதந்திர இந்தியாவில் பிரச்சினையைத் தீர்க்க மத்தியரசு செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன?
நீதிமன்ற வழக்குகளை வாபஸ் வாங்கியது யார்? அதற்காக அளிக்கப்பட்ட உறுதி மொழி என்ன? அது காப்பாற்றப்பட்டதா?
காவிரி நதி நீர் தீர்ப்பாணையம் இடைக்கால தீர்ப்பாக அளித்தது என்ன? இறுதித் தீர்ப்பாக சொன்னது என்ன?
தீர்ப்பாணையத்தில் கர்னாடகம் செய்த அடாவடிகள் என்ன?
காவிரி நதி நீர் ஆணையத்தையும் கண்காணிப்புக்குழுவையும் செயலற்ற ஒன்றாக கர்னாடக அரசு எப்படி மாற்றியது?
அரசிதழில் வெளியான தீர்ப்பாணை நடைமுறையில் உள்ளதா?
மேட்டூர் அணை ஒவ்வொரு வருடமும் எப்போது திறக்கப்பட்டது?

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவையாறு தொகுதி வேட்பாளர், தோழர் வெ.ஜீவகுமார் எழுதி பாரதி புத்தகாலயம்,  முப்பது ரூபாயில் வெளியிட்டுள்ள “காவிரி : பிரச்சனையின் வேர்கள்” என்ற நூலைப் படியுங்கள்.

“ஒரு நதியை பொறுத்தவரை அது பாயும் நிலப்பரப்பு மட்டும்தான் அந்த நதி சம்பந்தப்பட்டது. மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது. காவிரி தான் ஓடுவதை, பாய்வதை, பயன் தருவதை இயற்கையாக தீர்மானித்திருந்தது. மாநில எல்லைக் கோடுகள் பின்னர் மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டன.

பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமாகி வாரி வழங்கிய காவிரி தம்மைச் சுற்றி வரும் சோக செய்திகளால் கெட்டி இறுக்கமாகி விட்டாள். பாரம்பரியமாக காவிரிமடியில் தலை சாய்த்து அமுதுண்டவர்கள் தற்கொலை செய்து மடிகிறார்கள். காவிரி கலங்குகிறாள். காவிரியின் கரைகளில் கண்ணகி நீதி கேட்டு நடந்தது ஒரு காலம். இப்போது காவிரியே நீதி கேட்டு தெருவில் அலைகிறாள்.

இப்போதும் நெல்லி மரத்தடியில் காவிரி ஊற்றாகத்தான் பிறப்பெடுத்து ஓடி வருகிறாள். அதன் தண்ணீர் முன் போல் தேன் கனியாக இனிக்கவில்லை. கண்ணீரால் உப்பு கரிக்கிறது.”

எவ்வளவு அற்புதமான வரிகள்! “மாநில எல்லைக் கோடுகள் நதிகளுக்கு கிடையாது” என்பதை காவிரையை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிற கர்னாடக மாநில அரசியல்வாதிகள் உணர்ந்திட வேண்டும்.

காவிரி பாயும் திருவையாறு தொகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகளை முழுமையாக உணர்ந்துள்ள இவரன்றி வேறு யார் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பொருத்தமாக இருக்க முடியும்?


No comments:

Post a Comment