Sunday, October 2, 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த கல்வி அமைச்சர்




 புதுவை மாநில கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரம் 
பத்தாம் வகுப்பு தேர்வில் தனக்குப் பதிலாக 
வேறு ஒருவரை ஆள் மாறாட்டம்  செய்து 
எழுத வைத்ததாக புகார் வந்துள்ளது. 


அது பற்றி விசாரணை நடத்தப் போவதாக 
தமிழக கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
ஏனென்றால் சம்பவம் நடந்தது 
தமிழ்நாட்டில்தான். 


பத்தாவது கூட படிக்காதவர் 
கல்வித்துறை  அமைச்சரா  என்று 
யாரும்  கேள்வி கேட்காதீர்கள்.
அது முதல்வர் ரங்கசாமியின் 
உரிமை. 

நாளை திருட்டு வழக்கில்  
கைதானவரை காவல்துறை 
மந்திரியாக நியமிக்கும் 
உரிமை கூட அவருக்கு உண்டு.


கல்வி அமைச்சரான பின்பு 
பத்தாவது பாஸ்  செய்ய வேண்டும் 
என்று முடிவு செய்தாரே  அந்த 
நேர்மையை பாராட்டுங்கள்.


ஆள் மாறாட்டம் செய்தாவது 
பாஸ் செய்ய வேண்டும்  என்று
நினைத்தாரே, அந்த கொள்கை 
உறுதியை பாராட்டுங்கள். 


ஆள் மாறாட்டத்தை கண்டு 
கொள்ளாமல் இருந்திருந்தால் 
பதவி முடியும் முன்பாக 
டாக்ரடேட்  முடித்திருப்பாரே,
அந்த வாய்ப்பை கெடுத்து 
வீட்டீர்களே?

 

1 comment:

  1. இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

    ReplyDelete