Wednesday, October 5, 2011

அண்ணா ஹசாரே எனும் தாமரை முகம்

 
ஊழலுக்கு எதிராக இந்திய மக்களை உய்விக்க வந்த
புதிய உத்தம புருஷன், நவீன ரட்சகன் அண்ணா 
ஹசாரே   உதித்துள்ள  புதிய முத்துக்களை 
படித்தீர்களா?
  

ஜன லோக்பால் மசோதாவை  கொண்டு வரவில்லை
என்றால்  காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் 
என்று  விரைவில்  நடக்கவுள்ள  மாநில சட்ட மன்ற
தேர்தல்களில்  என்று  பிரச்சாரம் செய்வேன். முதல்
கட்டமாக ஹரியானா மாநிலத்தில் நடக்கவுள்ள
ஹிசார்  எம்.பி  தொகுதி   இடைத்தேர்தலில் 
பிரச்சாரம் செய்வேன்  என்று கூறுகின்ற  
இந்த  உத்தம புருஷன் பாஜக தனது மசோதாவை
ஆதரிப்பதாக வேறு சொல்கின்றார்.


காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஊழல் 
குற்றங்களைப் பொறுத்தவரை  ஒன்றுக்கு
ஒன்று சளைத்ததல்ல. 
ஆனால் இந்த புண்ணியாத்மாவிற்கு  பாஜக
கால ஊழல்கள் பற்றி தெரியாது போலும். 
கர்நாடகாவில் எட்டியூரப்பாவை  காலி
செய்தது பற்றி இவரது  பக்கத்திலேயே 
இருக்கும் சந்தோஷ் ஹெக்டே எதுவும் 
சொல்லவில்லை போலும்! 


ஆக அண்ணாவின் முகமும் தாமரை
முகம்தான் என்பது  வெளிப்படையாக 
தெரிந்து விட்டது. 


இவ்வளவு தூரம் வந்து விட்ட மிஸ்டர்
பரிசுத்தம் அவர்களே, முகமுடியை 
வீசி எறிந்து  விட்டு நேரடியாகவே 
ஜோதியில் ஐக்கியமாகி விடுங்களேன்.


ஆக லால் கிருஷ்ண அத்வானிக்கு 
அடுத்த போட்டியாளரும்  தயாராகி
விட்டார்!
 

2 comments: