Saturday, October 15, 2011

அசிங்கப்பட்டு நிற்கும் அரசியல் தலைவர்

ஊழலுக்கு  எதிராக  வீர சூர ரத யாத்திரை  புறப்பட்ட
சிங்கம் அத்வானி இப்போது  அசிங்கப்பட்டு நிற்கிறது.
ஊழல் இலஞ்சத்திற்கு  எதிரான  ரத யாத்திரையை 
நன்கு 'கவர்' செய்ய பத்திரிக்கையாளர்களுக்கு 
'பணக்கவர்கள்'  இலஞ்சமாக  அளிக்க  அதிலே  ஒரு
பத்திரிக்கையாளர்  மட்டும் அந்தப் பணத்தை திருப்பிக்
கொடுத்து விட்டு பத்திரிகையில்  போட்டும் தள்ளி 
விட்டார். 


லஞ்ச ஊழலுக்கு எதிரான ரத யாத்திரை  லஞ்ச ஊழல்
புகாரால் நிலை குலைந்து போய் விட்டது.


பின் குறிப்பு : கவர்கள்  இல்லாமல் பெரும்பாலான 
செய்திகள்  வருவதில்லை  என்பது சோகமான 
யதார்த்த. குறைந்தது ஐம்பது சதவிகித  நிருபர்கள்
கவர்களை, அன்பளிப்புக்களை  எதிர்பார்க்கின்றனர் 
என்பதும் அதில்தான்  அவர்களின் பிழைப்பு  
நடக்கிறது  என்பதும்  இன்னொரு  யதார்த்தம்.

   

No comments:

Post a Comment