Thursday, October 13, 2011

ஆள் மாறாட்ட மந்திரியை காணவில்லை.



பத்தாம் வகுப்பு தேர்வில்  ஆள் மாறாட்டம்  செய்த 
புதுவை கல்வி மந்திரியை  விசாரணைக்கு அழைக்கும்
நோட்டீசை  வழங்க முடியவில்லை. ஏனென்றால் 
அவரை காணவில்லையாம். எங்கே போனார் என்பது
தெரியவில்லையாம். 


ஒரு வேளை தொகுதிக்குள் ஒளிந்து  
கொண்டிருப்பாரோ! ஏனென்றால் பொதுவாக
மந்திரிகள் போகாத இடம்  அவர்களது 
தொகுதிகள்தானே! 


இன்னொரு சுவாரசியமான  விஷயம், மார்க்சிஸ்ட்
கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர்
புதுவை டி.முருகன்  சொன்னது.


அமைச்சரின் கல்யாண பத்திரிக்கைப்படி 
அவரது படிப்பு பி.ஏ, விசிடிங் கார்ட், லெட்டர் 
ஹெட் படி  பி.சி.ஏ , ஃ ப்ளெக்ஸ்  பேனர்களில் 
எம்.ஏ . 


அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!  

No comments:

Post a Comment