Friday, September 30, 2011

விஜய் டி.வி யின் அநாகரீகம். - வாக்களித்த மக்களுக்கு அசிங்கம்



விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி முடிந்து
மக்களும் தங்கள் காசுகளை கொட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பி
வெற்றி பெற்றது யார் என்று  அறிவித்து எல்லா கொண்டாட்டமும்
முடிந்து விட்டது. 

இப்போது இசைத்துறை  நடுவர்கள் யார் யார் எவ்வளவு 
வாக்கு போட்டார்கள்  என்று  நிகழ்ச்சி நடத்தி  மீண்டும்
நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன தோற்றம் கிடைக்கிறது  என்றால் நடுவர்கள் 
தேர்வு  என்னவோ மூன்றாம் இடத்தைப் பிடித்த 
நபர் என்றும் இசை ஞானம் இல்லாத மக்கள்  வேறு
ஒருவருக்கு கூடுதல் வாக்கு போட்டு விட்டார்கள் 
என்பதுதான். 

ஒன்று நடுவர்கள் மட்டும் தேர்நதெடுத்திருக்கலாம்.
மக்கள் வாக்களித்த பின்பு நடுவர்கள் அதை 
குறைகூறுவது போல பேசுவது அநாகரீகம். 

வாக்களித்த மக்களையும் முதல் பரிசு 
பெற்றவரையும் அசிங்கப்படுத்தும்  செயல்.
விஜய் டி.வியின் அநாகரீகம் 
கண்டனத்திற்குரியது.
   

No comments:

Post a Comment