Monday, October 17, 2011

அராஜகவாதிகளுக்குள் மோதலா?

மாவோயிஸ்டுகள்  தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் 
கொள்ள ஒரு வார கெடு அளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்
தொண்டர்களை மாவோயிஸ்டுகள் கொன்று குவித்த 
போது மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளே 
இல்லை என சாதித்தவர் மம்தா. 

மம்தாவின் ஆட்சியை  ஏற்படுத்துவதுதான் புரட்சி 
என செயல்பட்டவர்கள்  மாவோயிஸ்டுகள்.

கொள்கையற்ற இரு கூட்டங்கள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு
எதிராக கை கோர்த்தது . அவர்களின் நோக்கம் 
நிறைவேறியதும்  முரண்பாடுகள் இப்போது 
வெளி வந்து விட்டது.

முன்பு இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் மேற்கு
வங்க மாநிலத்தில் இல்லாத மாவோயிஸ்டுகள்
இப்போது மட்டும் எங்கிருந்து வந்தார்கள்?

7 comments:

  1. மாவோயிஸ்ட்கள் உங்களை என்ன செய்தார்கள்,உங்கள் புத்ததேவ் செய்ததைதான் மம்தா செய்யப் போகிறார். அதற்கான நேரத்தைதான் தள்ளி போடுகிறாரே தவிர, நீங்கள் நினைப்பதுபோல் மாவோயிஸ்டுகளிடம் கொஞ்சி குலவ வில்லை.

    ReplyDelete
  2. தேர்தல் வெற்றிக்காக மம்தா செய்தது என்ன? மாவோயிஸ்டுகள், திரிணாமுல் கூட்டணி செய்த அராஜகத்தை பற்றி பக்கம் பக்கமாக எழுத முடியும். ஏழை உழைப்பாளி மக்களை கொலை செய்தவர்கள்தான் மாவோயிஸ்டுகள். மாவோவின் பெயரில் செயல்படும் கொள்கையற்ற கூட்டம் அது.

    ReplyDelete
  3. நான் ஒன்றும் மாற்றி சொல்லவில்லை மம்தாவை பற்றி. பக்கம் பக்கமாக எழுதுங்கள். மாவோயிஸ்டுகள் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் சொல்லுங்கள். அவர்கள் ஏழைகளை குறி வைத்தா கொல்லுகிறார்கள். நிறைய பக்கங்கள் வேண்டா, தெரிந்ததை சொல்லுங்கள்

    ReplyDelete
  4. மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் வெறும் ஏழைத் தொழிலாளர்களா அல்லது பெரு
    முதலாளிகளா? அம்பானி வகையறாக்கள் பக்கம்
    மாவோயிஸ்டுகளின் துப்பாக்கிகள் திரும்புவதே
    இல்லை. பள்ளிக் கட்டிடங்களை இடிப்பதும்,
    ஆசிரியர்களை கொள்வதும், கஞ்சா பயிரிட்டு
    பணம் சம்பாதிப்பதும்தான் புரட்சிகரமான
    நடவடிக்கை போலும்.

    ReplyDelete
  5. அம்பானியையும், டாடாவையும் பாதுகாத்த மார்க்ஸிட்கள், அடுத்து பொய் சொல்வதில் கோயபல்ஸையும் மிஞ்சி விடுவார்கள் போலிருக்கிருக்கிறது.

    வாழ்க

    ReplyDelete
  6. கொள்கையில் உறுதியாகவுள்ள மாவோயிஸ்டுகள் வாழ்க,
    கொலைகளே செய்யாத உத்தமர்கள் மாவோயிஸ்டுகள் வாழ்க,
    சத்தியசீலர்கள் மாவோயிஸ்டுகள் வாழ்க,

    வாழ்க, வாழ்க, அவர்களின் அழித்தொழிப்புப் புரட்சி வாழ்க,

    என்ன திரு வேல்முருகன் திருப்தியா?

    ReplyDelete
  7. தங்களின் மேற்கண்ட கருத்துக்கள் என்னை திருப்தி படுத்தவில்லை. நீங்கள் நழுவுவதாகவே தோன்றுகிறது. தாங்கள் விரும்பாத பட்சத்தில் விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete