Sunday, September 4, 2011

இந்திய அழிவுப்படை - சில எதிர்பாராத தகவல்கள்



ராஜீவ் காந்தி கொலை நியாயமென்று  ஒரு சி.பி.ஐ அதிகாரி
தெரிவித்தது பற்றி நேற்று எழுதியிருந்தேன். இந்திய 
அமைதிப்படை  நிகழ்த்திய அராஜகங்கள் பற்றியது 
அப்பதிவு. அதன் தொடர்ச்சியாகவே  இப்பதிவு.


நாம் எல்லோரும் அப்பாவியாக  நினைத்துக் கொண்டிருப்பது
 என்ன? 


1983 வெலிக்கடை சிறை கலவரத்திற்கு பின்பு இலங்கையில் 
நெருக்கடி முற்றியது. அகதிகள் அதிகமாக இந்தியா வரத் 
தொடங்கினார்கள். 1987 ல் நிலைமை மிகவும் மோசமாக
போனது. யாழப்பாண  மக்கள்  உணவு கூட இல்லாமல் 
சிரமப்பட்டனர். தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் 
இருந்து   படகுகளில்  உதவிப் பொருட்களை அனுப்ப 
ஏற்பாடு நடந்தது. அப்போது மத்திய அரசு தலையிட்டு 
ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்களை  
யாழ்ப்பணத்தில் போட்டு விட்டு வந்தது. எங்கள் 
நாட்டு எல்லைக்குள் எப்படி வரலாம் என இலங்கை 
அரசு  சீறியது.  கலைஞரோ  நக்கல் செய்தார். இதன்
தொடர்ச்சியாக மத்தியரசு ஆர்வம் காட்ட
ராஜீவ்  ஜெயவர்த்தனே  ஒப்பந்தம் உருவானது,
அமைதிப்படை  சென்றது. 


இப்படித்தான்  நாம்  நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
1983   கலவரத்திற்கு முன்பே இலங்கைக்கு  இந்தியப்
படையை அனுப்புவது  என்று  இந்திய  அரசு  
முடிவு செய்து விட்டது. 

 1992 ல்   நெய்வேலியில் இருந்து   குடியாத்தம் கிளைக்கு
பதவி உயர்வில் சென்றேன். அங்கே தர்மராஜ் என்ற 
தோழர், கப்பற்படையில் பணியாற்றியவர். அவரை 
 அறிமுகம் செய்து  வைத்தபோது  என்னை இதற்கு 
 முன்பாக பார்த்த நினைவு உள்ளதா என  கேட்க
 நான் பதில் சொல்லுமுன்னரே  தோழர்  வந்த 
உடனேயே உன் கதை வேணாம், பிறகு
பார்த்துக்கலாம் என்று   குடியாத்தம்  கிளைச் 
செயலாளர் அடுத்த தோழரது இருக்கைக்கு 
கூட்டி போய்விட்டார்.


 பிறகு  அவரோடு பேசுகின்ற போது  அவர்
சொன்ன தகவல் இதுதான். 1980 களின்  
துவக்கத்திலேயே  முப்படைகளிளிருந்தும்  
முப்பது பேரை தேர்ந்தெடுத்து  புது டெல்லி 
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 
சிங்கள மொழி கற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்கள். 


சிங்கள  மொழி  கற்பது என்றால் ஓரிரு மாதங்கள்
அல்ல, மூன்று வருடங்கள் முழுமையாக அவர்கள்
 பயின்றுள்ளார்கள். 1985 ல்   அவர்களின் படிப்பு 
முடிந்து விட்டது. ஒரு  ஆபரேஷன் நிகழ்த்தப் 
போகின்றோம். அதிலே உங்களுக்கு பணி உள்ளது
என்று  சொல்லி அனுப்பி விட்டார்கள்.


ராஜீவ்  ஜெயவர்த்தனே  ஒப்பந்தத்தின் போது  
இருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளராக
தோழர்  தர்மராஜ்  செயல்பட்டுள்ளார். அக்காட்சி
தொலைகாட்சியில் பல முறை காண்பிக்கப்பட்டுள்ளது,
 என்னை  பார்த்தீர்களா என்பதுதான் அவர் 
ஒவ்வொருவரையும் கேட்கும் கேள்வி.


சிங்கள  மொழி  படித்த அனைவருமே 
அமைதிப்படையில்  இணைக்கப்பட்டு  சிங்கள
படை வீரர்களுக்கும் இந்திய  வீரர்களுக்கும்
இடையே   மொழ பெயர்ப்பாளர்களாக  பல
இடங்களில்  செயல்பட்டுள்ளனர்.


சிங்கள்  மொழியை கற்றுக் கொடுப்பது 
என்பதிலிருந்தே  இந்திய  அரசு  இலங்கை
பிரச்சினையில் நேரடியாக தலையிட 
முன்னரே திட்டமிட்டது என்பதை  புரிந்து
 கொள்ள  முடிகின்றது. ஆனால் அத்தலையீடு
தமிழர்களுக்கு சாதகமாக இல்லை என்பதுதான்
வருத்தமான உண்மை.


அமைதிப்படையின் அராஜகமும் தோல்வியும் 
பற்றி  நாளை

2 comments:

  1. சொல்லுங்க சொல்லுங்க...

    ReplyDelete
  2. தொடர்ந்து எழுதுங்கள்.
    தெரிந்து கொள்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete