Wednesday, September 14, 2011

சிறு மீன்கள் சிறையிலே, திமிங்கலங்கள் உல்லாசமாகவே




அவதியுறும்  அம்புகள்


அம்புகளுக்கு தண்டனை  தரும் 
அற்புத நாடு,
பாருக்குள்ளே நல்ல நாடு
தொடர்புகளைத் தொலைத்ததில்
காமன்வெல்த்  திருவிளையாடல்களில்
எண்ண முடியாத கோடிகள் .....
ஏழுமலையான்  மொட்டை 
கார்கில் குடும்பத்தினருக்கு .... ஆதர்ஷில் 


நம்பிக்கையைப் பெற 
நாணயம் தேவையில்லை
நோட்டுக்களே  போதும் என்ற
செய்வினை  ஜெயிலில்
செயப்பாட்டு வினை  நாற்காலியில் 


திக்கு  தெரிந்த  திகாரில் 
அம்புகளுக்கு  இலையுதிர்காலம்
வசந்த காலம்  என்றுமே 
எய்தவனுக்கா? 
  
கவிதை ஆக்கம் 
மதுரை பாரதி



  

1 comment:

  1. அப்ப ராசா , கனி பாவம் னு சொல்றிங்களா ?

    ReplyDelete