Thursday, September 22, 2011

சிதம்பரமும் கூட்டுக் களவானிதான் - நிதியமைச்சகமே சொல்கிறது.



அலைக்கற்றை ஊழலில்  நடந்தது  எல்லாம் ப.சிதம்பரத்திற்கு 
தெரியும்  என  அ.ராசா கூறுவது உண்மை என நிரூபணம் ஆகி
உள்ளது. 
அலைக்கற்றைகளை  ஏலம் விட வேண்டும் என்பதில் ப.சி 
உறுதியாக  இருந்திருந்தால்  சரியாக இருந்திருக்கும். ஆனால்
அவர் அ.ராசாவோடு  இருந்து விட்டார். தொலை தொடர்புத்துறை
கூட  ஒதுக்கீடுகளை   ரத்து  செய்திருக்க முடியும். ஆனால்
செய்யவில்லை. 


மேலே சொன்னது நிதியமைச்சகத்திடமிருந்து  பிரதமருடைய 
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பு. 
ஆம், இப்படி ஒரு குறிப்பு  அனுப்பப்பட்டது  உண்மைதான்  என 
இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு  உள்ளதால்  வாய் திறக்க மாட்டேன் என
அவர் ஒடி விட்டார்.


பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பப்பட்ட குறிப்பை மன்மோகன் 
பார்த்திருக்க மாட்டாரோ, அவர் அலுவலகத்து பெருச்சாளிகள்
தின்றிருக்குமோ! 
ஆக அலைக்கற்றை  வலையில் திமிங்கலங்களும் 
சிக்கப்போகின்றது.

No comments:

Post a Comment