Thursday, September 22, 2011

சிதம்பரமும் கூட்டுக் களவானிதான் - நிதியமைச்சகமே சொல்கிறது.



அலைக்கற்றை ஊழலில்  நடந்தது  எல்லாம் ப.சிதம்பரத்திற்கு 
தெரியும்  என  அ.ராசா கூறுவது உண்மை என நிரூபணம் ஆகி
உள்ளது. 
அலைக்கற்றைகளை  ஏலம் விட வேண்டும் என்பதில் ப.சி 
உறுதியாக  இருந்திருந்தால்  சரியாக இருந்திருக்கும். ஆனால்
அவர் அ.ராசாவோடு  இருந்து விட்டார். தொலை தொடர்புத்துறை
கூட  ஒதுக்கீடுகளை   ரத்து  செய்திருக்க முடியும். ஆனால்
செய்யவில்லை. 


மேலே சொன்னது நிதியமைச்சகத்திடமிருந்து  பிரதமருடைய 
அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட குறிப்பு. 
ஆம், இப்படி ஒரு குறிப்பு  அனுப்பப்பட்டது  உண்மைதான்  என 
இன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு  உள்ளதால்  வாய் திறக்க மாட்டேன் என
அவர் ஒடி விட்டார்.


பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பப்பட்ட குறிப்பை மன்மோகன் 
பார்த்திருக்க மாட்டாரோ, அவர் அலுவலகத்து பெருச்சாளிகள்
தின்றிருக்குமோ! 
ஆக அலைக்கற்றை  வலையில் திமிங்கலங்களும் 
சிக்கப்போகின்றது.

Wednesday, September 21, 2011

அமெரிக்காவிடம் இந்திய அரசு பாடம் கற்க வேண்டும்



கொலைக்குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அமைச்சர்
டக்லஸ் தேவானாந்தா மீது  எந்த நடவடிக்கையும் 
எடுக்க முடியாது. அமைச்சர் என்பதால் ராஜீய 
ரீதியில் ஆன  பாதுகாப்பு  (Diplomatic Immunity)
உள்ளது  என்று  உள்துறை அமைச்சகம்
கூறியுள்ளது.


இலங்கைத்  தமிழர்களுக்கு எதிரான ஆட்களுக்கு
ரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கும்  பசி
வகையறாக்கள், ராஜீய உறவுகளை எப்படி
மதிப்பது  என்று  அமெரிக்காவிடம் பாடம்
கற்க வேண்டும்.


ஏனென்றால்  அவர்கள்தான்  இந்தியாவின்
பாதுகாப்பு அமைச்சரை நிர்வாணப்படுத்தி 
சோதித்தவர்கள். உள்துறை அமைச்சர் 
அத்வானி மட்டுமல்ல  முன்னாள் 
ஜனாதிபதி  அப்துல் கலாமையே 
தடவிப் பார்த்து  சோதனை செய்தவர்கள்.


புடவை கட்டியதால் துணைத் தூதருக்கும்
இதே கதிதான். 


ராஜீய பாதுகாப்பு என்று சிதம்பரத்தின்
அமைச்சகம் மட்டும் கொலைகாரனுக்கு
ஆதரவாய் நிற்கிறது!


புடலங்காய் ராஜீய உறவு. . . .       
 

Tuesday, September 20, 2011

தந்தை பெரியாரும் நரேந்திர மோடியும் - யாரிடம் உள்ளது நாகரீகம்?



தந்தை பெரியார் மிகப்பெரிய கடவுள் மறுப்பாளர் என்பது
உலகம் அறிந்த உண்மை.  ஆனால்  அவரை  சந்தித்த  ஒரு
ஆன்மீகவாதி  அவருக்கு விபூதி  அளித்தபோது  அவர் 
அதனை மறுக்கவில்லை. ஏன்  எனக் கேட்டதற்கு  அந்த
மனிதரை புண்படுத்த விரும்பவில்லை  என்று தந்தை
பெரியார் கூறியதாக  படித்துள்ளேன். 


மத நல்லிணக்கத்தை  வலியுறுத்த என்று  சொல்லி மூன்று
நாட்கள்  உண்ணா விரத நாடகம்  நடத்திய நரேந்திர 
மோடியிடம்  ஒரு முஸ்லீம் பெரியவர் ஒரு தொப்பி 
அளிக்க அதனைப் பெற்றுக் கொள்ள  முரட்டுத்தனமாக
மறுத்து விட்டார். 


மத நல்லிணக்க உண்ணா விரதத்திலேயே  ரத்தம் 
கடைவாயில் ஒழுக, கோரப் பற்களுடன்  மோடி 
தனது மத வெறி முகத்தை காட்டி விட்டார்.


நாத்தீகவாதி பெரியாரின் நாகரீகம்  எங்கே?
பக்திமான் நரேந்திர மோடியின் வெறித்தனம் எங்கே?


உண்ணாவிரதத்திற்கு  ஆள் அனுப்பிய ஜெயலலிதா 
பதில் சொல்வாரா?


 

Monday, September 19, 2011

உண்ணாவிரதமா? புதுசா ஏதாவது பண்ணுங்கப்பா!



வர வர உண்ணாவிரதப் போராட்டங்கள்  அர்த்தமிழந்து
போய்க்கொண்டிருக்கிறது. 

அண்ணா ஹசாராவின்  உண்ணாவிரதங்கள் பிரதமரை
லோக் பால் மசோதாவில் சேர்க்கவில்லை. ஆனால் அது
வெற்றி என பேசப்படுகின்றது.   


பாபா ராம்தேவின் உண்ணா விரதம் அவரை சுடிதார்
அணியவைத்தது.


ஏர்கண்டிஷன் அறையில்  உத்தமர் வேடம் போட 
இப்போது  மோடி உண்ணா விரதம்.


அதற்கு போட்டியாய்  காங்கிரசார் உண்ணாவிரதம்.


இந்த பரபரப்பு உண்ணாவிரதங்கள் நியாயமான 
கோரிக்கைகளுக்காக  உண்ணாவிரதப் 
போராட்டம் மேற்கொள்ளும்  பலரை 
பல அமைப்புக்களை  கவனிப்பு  கிடைக்காத
வண்ணம் செய்து விடுகின்றது.  


அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என
அரசியல் பிரபலங்கள் ஆசைப்பட்டால் கலைஞர் 
போல காலை உணவுக்கும் மதிய உணவிற்கும்
இடைப்பட்ட நேரத்தில் ஏர்கூலர்கள் வசதியோடு
மூன்று மணி நேரத்தில் முடித்து விடுங்கள். 
 

Sunday, September 18, 2011

திருந்தாத ஜென்மம் ஜெயலலிதா,


சமச்சீர்  கல்வி  தொடங்கி 
சட்ட மன்ற வளாகம் வரை
தொடரும் ஜெயலலிதாவின்
தன்னிச்சையான போக்கு
இப்போது  உள்ளாட்சித்
தேர்தலிலும் தொடர்கின்றது.




படுகொலை செய்து விட்டு
யோக்கிய வேஷம் போடும்
நரேந்திர மோடிக்கு
ஆதரவு தெரிவிக்க
ஆட்களை  அனுப்பியதிலும்
தெரிகின்றது.



முன்பு தனது சொந்தக்
கட்சிக்காரர்களை
உதிர்ந்த ரோமம்  என்று
கூறினார்.



கூட்டணிக் கட்சிகளை
என்ன சொல்லப்
போகின்றாரோ?



நினைத்துப் பார்த்தால்
வேதனையாக உள்ளது.

Thursday, September 15, 2011

தீவிரவாதிகள் அழகாகவே இருப்பார்கள்

நேற்று  இரவு அன்பே சிவம் திரைப்படம் வீடியோவில் 
பார்த்தேன். திருட்டு வீடியோ அல்ல, கம்பெனி வெளியீடுதான்.
அதிலே கமல் மாதவ்னைப்  பார்த்து  தீவிரவாதிகள் 
பயங்கரமாக இருக்க மாட்டார்கள். அழகாகவே 
இருப்பார்கள் என்பார். என்னைப் போல என மாதவன்
முடிப்பார்.


அதைப்  பார்த்தபோது  நினைவுக்கு  வந்த ஒரு சம்பவம்
கீழே.    


1990 ல் கட்டாக் நகரில்  எங்கள்  சங்க அகில இந்திய 
மாநாடு. மாநாடு முடிந்து  கல்கத்தா  சென்று  வர 
திட்டமிட்டிருந்தோம்.  எந்த ஒரு புகை வண்டியிலும் 
முன் பதிவு கிடைக்கவில்லை. 


அதனால் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில்  காத்திருந்து
கல்கத்தா  செல்லும்  ஒரு புகைவண்டியில்  முன்பதிவு
செய்யாத ஒரு பெட்டியில்  ஏற முயற்சித்தோம். 
மூடியிருந்த  பெட்டியின்   கதவுகளை திறக்க 
தட்டி, தட்டி ஒரு வழியாக உள்ளே நுழைந்தோம்.


உள்ளே போனால் அதிர்ச்சி, காவல் துறையினரும்
ராணுவத்தினரும்  கையில் துப்பாக்கிகளோடு 
கடு கடு முகத்தோடு ஹிந்தியில்  திட்டிக் கொண்டே
உள்ளே  எங்களை அனுமதித்தார்கள்.


நடுவே  ஒரு இளைஞன்  25 வயது கூட  இருக்காது.
திரைப்பட நடிகர் அப்பாஸ் போல நல்ல வெள்ளை
நிறம், கண்களில் தீட்சண்யம், கதா நாயகன் 
போன்ற தோற்றம்.


என்ன அந்த இளைஞன் கையில் விலங்கு, கால்களில்
விலங்கு, இடுப்பில் இரும்புப் பட்டை கட்டி சங்கிலியை
ரயிலோடு இணைத்திருந்தார்கள். 


யார் எந்த இளைஞன் என்று ஆங்கிலம்  தெரிந்த ஒரு
ராணுவ வீரரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
அதிர்ச்சி அளித்தது. 


உல்ஃபா  அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதி 
அந்த இளைஞன் என்றும்  ஐந்து இடங்களில் 
வெடிகுண்டு வைத்தவன், நான்கு பேரை  
துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றவன்  என்றும்
விசாகப்பட்டினத்தில்  தலைமறைவாக  இருந்தவனை
மடக்கி கைது செய்து  கவுகாத்தி கூட்டிச் செல்கிறோம்
என்று  தெரிவித்தார். 


அந்த பால் வடியும் முகம் இன்னமும் நினைவில்
உள்ளது. 


ஆக தீவிரவாதிகள்  அழகாகவே  இருப்பார்கள்.  
     

Wednesday, September 14, 2011

சிறு மீன்கள் சிறையிலே, திமிங்கலங்கள் உல்லாசமாகவே




அவதியுறும்  அம்புகள்


அம்புகளுக்கு தண்டனை  தரும் 
அற்புத நாடு,
பாருக்குள்ளே நல்ல நாடு
தொடர்புகளைத் தொலைத்ததில்
காமன்வெல்த்  திருவிளையாடல்களில்
எண்ண முடியாத கோடிகள் .....
ஏழுமலையான்  மொட்டை 
கார்கில் குடும்பத்தினருக்கு .... ஆதர்ஷில் 


நம்பிக்கையைப் பெற 
நாணயம் தேவையில்லை
நோட்டுக்களே  போதும் என்ற
செய்வினை  ஜெயிலில்
செயப்பாட்டு வினை  நாற்காலியில் 


திக்கு  தெரிந்த  திகாரில் 
அம்புகளுக்கு  இலையுதிர்காலம்
வசந்த காலம்  என்றுமே 
எய்தவனுக்கா? 
  
கவிதை ஆக்கம் 
மதுரை பாரதி