Friday, January 31, 2025

நீங்க என்ன புரோக்கரா மோடி?

 


இந்தியாவை வ;ல்லரசாக்கும்படி இந்த வருட பட்ஜெட் இருக்கும் என்று சொல்கிற மோடி, ஏழை நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியிடம் பிரார்த்திக் கொள்வதாகவும் சொல்கிறார்.

 


அதற்கு என்ன பொருள்?

 ஏழை, நடுத்தர மக்கள் பயனடைவது போல  பட்ஜெட்டில் எதுவும் இருக்கப் போவதில்லை என்று அர்த்தம்.

 மக்களுக்கு செல்வம் வேண்டுமானால் லட்சுமியிடம் பிரார்த்தனை செய்தால்தான் நடக்கும், அரசின் கொள்கைகளால் எந்த பிரயோச்சனமும் கிடையாது என்றால் அவர்களே நேரடியாக பிரார்த்தனை செய்து கொள்வார்கள், நடுவில் உமக்கு எதற்கு புரோக்கர் வேலை? போய் வழக்கம் போல அதானி, அம்பானிக்கு முறைவாசல் செய்து அவர்கள் வீசும் எலும்புத்துண்டுகளை பொறுக்கிக் கொள்ளவும்.

Thursday, January 30, 2025

தமிழ் இந்து வெட்டிய "தகப்பன்சாமி"

 



எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.

*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*























- களப்பிரன் Kalapiran Kalam
(நன்றி: இந்து தமிழ் திசை 30.01.2025)

இன்று வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவம்

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளில் அம்பேத்கர் குறித்து ஏன் பேசவேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியடிகளுடன் மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியடிகளை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். காந்தியடிகளும் அம்பேத்கர் கருத்துக்கு எதிராக தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார். இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காந்தியடிகள் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவிற்கு தாக்கம் செழுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.

*தீண்டாமைக்கு எதிரான தலைவர்*
1948 ஜனவரி 30ல் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பாக அவரைக் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அந்த ஏழு முயற்சிகளும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றது. காந்தியடிகள் ஆப்ரிக்காவில் இருந்த காலத்திலிருந்தே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தவர் தான். தன் மனைவி கஸ்தூரிபாயை கொண்டு ஒரு ஒடுக்கப்பட்டவரின் மலச்சட்டியை சுமக்கச்சொல்லும் அளவிற்கு தீண்டாமைக்கு எதிராக சொந்த வாழ்வில் இருந்தவர் தான். 1915ல் இந்தியா வந்த பிறகு அகமதாபாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை தங்கவைத்தார். அதற்காக காந்தியடிகளை வைணவப் பிரிவினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். அவர் ஆசிரமத்திற்கு நிதி கொடுத்தவர்கள் தங்கள் நிதியை நிறுத்திக்கொண்டனர். ஆனாலும் காந்தியடிகள் தன் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தினார்.

”தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்கு சுயராஜ்ஜியம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே அதுவும் காங்கிரஸ் மாநாடுகளில் நின்று கொண்டு கடுமையாக பேசியவர் தான் காந்தியடிகள். ஆனாலும் சாதிய அமைப்பு குறித்தும், இந்துமத புனிதம் குறித்தும் காந்தியடிகளுக்கு இருந்த பார்வை மிகப்பழமையானவை. அப்போதெல்லாம் காந்தியடிகளின் இக்கருத்துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை.

*கிளம்பிய எதிர்ப்பு*
1932 பூனா ஒப்பந்தத்தை ஒட்டியும் அதற்கு பின்பும் அம்பேத்கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தியடிகளிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் இவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவே பார்க்கப்பட்டது. அம்பேத்கருடனான உரையாடலுக்குப் பின் அது ”ஹரிஜன இயக்கம்” என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது. தீண்டாமைக்கு எதிராக காந்தியடிகள் தொடர் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி அது சூராவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்துமகா சபையினரின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மலத்தை எடுத்து அவர் மீது வீசுதல் என்று எதிர் இயக்கத்தை தொடங்கினார்கள். முதல் முறையாக இந்தியாவில் காந்தியடிகளுக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போது தான். அதன் உச்சமாக 1934 ஜுன் 25ல் புனாவில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரை கொலை செய்யும் முதல் முயற்சியை தொடங்கி வைத்தார்கள். அம்பேத்கரை காந்தியடிகள் சந்தித்து உரையாடாமல் இருந்திருந்தால் இந்த முதல் கொலை முயற்சியே நடந்திருக்காது.

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் சுனக்கமில்லாமல் தீவிரமடைந்தது. கோவில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்துகளை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்வதிப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. ”இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்கலாமா?” என்று காந்தியடிகளை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்புகிறேன்” என்று கடுமையான பதிலைளித்தார். அவர் பேச்சின் சுடு தாங்காமல், “காந்தியையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதினார்கள் அப்போதைய மடாதிபதிகள். இதன் தொடர்ச்சியாக காந்தியை கொலை செய்த அதே நாதுராம் கோட்சே 1944 மே மாதத்தில் புனே அருகே உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் காந்தியடிகள் மீது கத்தியால் குத்தி இரண்டாம் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

*இவ்வாறு நடைபெற்ற தொடர் கொலை முயற்சிகளுக்கு, காந்தியடிகள் இந்துமத சனாதனிகளின் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதே காரணமாகும். ஒரு முறை காந்தியடிகள், “கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். 125 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன்” என்று கூறினார். அதற்கு பதிலாக நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ”அக்ரனி” இதழில் “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டுவைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று வன்மத்தோடு பதில் எழுதினார். அதன் பிறகே 1948 ஜனவரி 30ல் அதே கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அளவிற்கு காந்தியடிகளுக்கும் சனாதானிகளுக்கும் இடையே தீராப்பகையை தொடங்கிவைத்தது அம்பேத்கருடனான காந்தியடிகளின் உரையாடல்களே.*

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்கவில்லை. பல நேரங்களில் கடிந்தே சொல்லியுள்ளார். ”காந்தி ஒரு ஆச்சாரமான இந்து தான். இவரால் தீண்டாமை ஒழிக்கப்படாது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தியடிகளோ, “டாக்டர் அம்பேத்கரின் விமர்சனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மீது துப்புவதற்கு கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களை நடத்துவது பாவம். நம் மீது காறி உமிழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை செய்தால் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளிக்கிறார். ஆனால் இவ்வளவு கணிவான பதிலை தன்னை எதிர்க்கும் சனாதனிகளுக்கு எதிராக காந்தியடிகள் ஒருபோதும் சொன்னதில்லை.

*காந்தி – அம்பேத்கர் உறவு*

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டிற்கு அழைத்தார். காரணம் அம்பேத்கர் 1946ல் அன்றைய வங்காள மாகனத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால் காந்தியடிகள் இதில் தலையிட்டு அம்பேத்கரை மும்பை மாகாணத்திலிருந்து மீண்டும் தேர்வு செய்ய வலியுறுத்தினார். அதோடு அவரை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்தார். சனாதானிகளிடம் இருந்த பகை முரண் போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்ததில்லை.

காந்தியடிகளைப் பொறுத்த வரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பிசி ஜோசி என்ற எல்லோருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லோரிடமும் நடந்துகொண்டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்கியது கிடையாது. சில பிள்ளைகள் அவர் பேச்சை கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்படும் பிள்ளைக்காக மாற்றிக் கொண்டதேயில்லை. அதற்காக வருத்தப்பட்டதுமில்லை. ஆனால் ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்சியை தூங்கவிடமால் செய்தது. அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர். அந்தப் பிள்ளைக்காகவே அவர் பல நேரங்களில் மனம் மாறினார். நம்மூரில் தந்தைக்கு அறிவுரை சொல்லும் பிள்ளைக்கு தகப்பன் சாமி என்ற பெயர் உண்டு. காந்தியடிகள் வாழ்வில் அவருக்கான தகப்பன் சாமி அண்ணல் அம்பேத்கர் தான்.

உமக்கு அருகதை கிடையாது ஆரெஸெஸ்.ரெவி

 


சில நாட்கள் முன்பாக காந்தி தேசத்தந்தை கிடையாது என்றும் அவரால் ஒன்றும் சுதந்திரம் வரவில்லை என்றும் உளறிய ஆட்டுத்தாடி ரெவி இன்று என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.


மகாத்மா காந்தியை கொலை செய்த கூட்டத்தை போற்றிக் கொண்டு அதன் கேவலக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு மகாத்மாவின் அனைத்து லட்சியங்களுக்கும் எதிராக செயல்பட்டு, மத வெறியை பரப்பிக் கொண்டிருக்கிற காவிக்கயவன் ஆரெஸெஸ்.ரெவியே, உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசவோ, அவர் படத்திற்கு மாலை போடவோ கொஞ்சம் கூட அருகதை கிடையாது.

போ, போய் கோட்சே படத்துக்கும் கோழை சாவர்க்கர் படத்துக்கும் பூஜை செய் . . .

Wednesday, January 29, 2025

தொழிற்சங்கம் இருந்திருந்தால் ? சங்கிகளே சொல்லுங்கள் . . ..

 


சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது “தொழிற்சங்கம் அமைத்தால் நிறுவனத்தை மூடி விடுவார்கள்” என்று சங்கிகளும்  சில உடன் பிறப்புக்களும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் காவல் அரணாக திகழ்கின்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக இந்த முட்டாள்தனமான கூச்சல்களை கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

அப்போது எழுதிய

தொழிலாளர் போராட்டம் -  மூடச்சங்கிகளின் பொய்க்கணக்குகள்”  என்ற பதிவின்  இணைப்பு  இது.

அவசியம் படியுங்கள்.

இந்த பட்டியலில் புதிதாக ஒரு நிறுவனம் இணைந்துள்ளது.

கோவையில் செயல்படுகின்ற ஃபோகஸ் எடுமேடிக் என்ற அமெரிக்க நிறுவனம்  திங்கட்கிழமையன்று திடீரென மூடப்பட்டுள்ளது. வெறும் மின்னஞ்சல் மூலமாக தகவல் சொல்லப்பட்டுள்ளது. 1500 ஊழியர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர்.

தொழிற்சங்கம் எதுவும் அங்கே இல்லை. அதனால் போராட்டம் காரணமாக நிறுவனம் மூடப்பட்டது என்று சங்கிகள் கதை விட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

நடுத்தெருவில் நின்ற ஊழியர்களுக்காக,  தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக குவிந்த அந்த ஊழியர்களுக்காக சி.ஐ.டி.யு தலையிட்ட பின்னணியில் ஜனவரி மாதம் பணி செய்தமைக்கான ஊதியத்தையும் ஐந்து வருடம் பணி செய்த ஊழியர்களுக்கு மட்டும் பணிக்கொடை சட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய பணிக் கொடையையும் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டுள்ள நிதியையும் மட்டும் தர முன்வந்துள்ளது நிர்வாகம். இதற்கே ஒரு தொழிற்சங்கம் தலையிட வேண்டியிருக்கிறது.

இதுவே அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் இருந்திருந்தால்

ஒரு வேளை நிறுவனம் மூடப்படுவதைக் கூட தவிர்த்திருக்க முடியும்.

அம்போவென்று தெருவில் நிறுத்தப்ப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவு.

சாம்சங் பிரச்சினையில் நிர்வாகத்திற்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பிய சுமந்து, எஸ்.ஜி.சூர்யா, ஆட்டுக்காரன் உள்ளிட்ட சங்கிகள் யாரும் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வேளை உயிரோடு இருந்தாலும் கூட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேச மாட்டார்கள். ஆம். அவர்களின் வர்க்க குணாம்சம் அதுதான்.

மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்.

ஒரு தொழிற்சங்கம் இருப்பதுதான், அதுவும் செங்கொடி சங்கமாக இருப்பதுதான் அந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல நிறுவனத்திற்கும் பாதுகாப்பு.

 

தமிழக அரசால் உ.பி யில் முடியுமா?

 


தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையால் உத்திர பிரதேச மாநிலத்தின் நகரங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் “ சமூக நீதியின் பெருமை – தந்தை பெரியாரின் தமிழ்நாட்டு மண்” என்று ஹிந்தியில் தந்தை பெரியார் படத்தோடு பேனர் வைக்க முடியுமா?

 பின் என்ன எழவிற்கு சனாதன தர்மத்தின் பெருமை என்று மொட்டைச் சாமியார் படத்துடன் பேனர் வைக்க அனுமதிக்க வேண்டும்?

 


எஸ்.வி.சேகர் அப்பாவின் பெயரை தெருவுக்கு சூட்டியதை விட கொடுமை இது.

 

Tuesday, January 28, 2025

காவிக்கண்ணாடி அணிந்தால் இப்படித்தான் . ..

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு தீவிர சங்கி போட்டுள்ள பதிவு கீழே . .


அமைச்சர் துரைமுருகன் பின்பக்கம் கையை கட்டிக் கொண்டதை கவனித்து நக்கலடிக்கத் தெரிந்தவருக்கு அவங்காளு ஆரெஸெஸ் ரெவியின் பால்ய விவாகம் செய்து கொண்ட மனைவி முன்பக்கம் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது மட்டும் தெரியவில்லை, பாவம்.

காவிக்கண்ணாடி அணிந்துள்ளதன் விளைவு இது. அதனால் நான் காவிக் கலரில் சுழித்து வைத்துள்ளேன். 

மறுபடியும் சிக்கிய மாலன்.

 


போன திங்கட்கிழமை  அன்று நடைபெற்ற சம்பவம் இது.

தீக்கதிர் சென்னை பதிப்பின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், முகநூலில் அந்நாள், இந்நாள் கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு நண்பரோடு நடந்த உரையாடலை பகிர்ந்து கொண்டிருந்தார்.

தன் பக்கத்தை இறுக்கமாக பூட்டி வைத்திருக்கும் மூத்த்த்த மாலன் அங்கே சம்மனின்றி ஆஜராகி  அப்போதுள்ளவர்கள் போல இப்போது இல்லை என்று பட்டியல் போட்டு கடைசியில் கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவதில் வந்து நின்றார்.


 

“அப்போதிருந்த ஊடகவியாளர்கள் மாதிரி இப்போதும் இல்லை. மோசமான ஊடகவியலாளருக்கு உம்மை உதாரணம் காண்பிக்கலாம். உங்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேச அருகதை கிடையாது.  எங்கள் மகத்தான் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் சொல்வது போல பணத்திற்காகவும் விருதுகளுக்காகவும்  நீரெல்லாம் பேனாவை வாடகைக்கு விடும் வியாபாரி”  என்று சூடாகவே பின்னூட்டம் எழுதினேன்.

 


அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

 “என்னை வசைபாடுவது பதிலாகாது. நான் ஊடகத்தலைமையில்  இருந்தவரை எந்த அரசிடமிருந்தும்  விருது பெறவில்லை”

 என்று அவர் சொல்ல

 “நான் வசை பாடவில்லை. உங்களைப் பற்றிய உண்மையைச் சொன்னேன். கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு கிடையாது என்று மீண்டும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். உத்தமர் போல வேடம் போட வேண்டாம். உலகிற்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும்”

 


என நான் திருப்பி கொடுக்க

 மூத்த்த்தவர்  மீண்டும் பதுங்கி விட்டார். நீண்ட நாட்களாக கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டிருந்தவர் வசமாக சிக்கிய போது எப்படி வாய்ப்பை இழப்பது, அடிக்காமல் இருப்பது.

 “வார்டன்னாலே அடிப்போம்” என்பது போல மாலன்னாலே அடிதான்.

Monday, January 27, 2025

சாம்சங் – தமிழ்நாடு அரசு இனியாவது தவிர்க்கட்டும்

 


சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஒரு வழியாக பதிவு செய்யப்பட்டு விட்டது. உறுதியோடு போராடிய தொழிலாளர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்து விட்டது.

அவ்வளவு சுலபமாக வந்து விடவில்லை இந்த வெற்றி . . .

ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது என்பதும் போராடுவதும் என்பதும் எப்போதுமே எளிதானது அல்ல. சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் மிகவும் கடினமான ஒன்று. தொழிலாளர்களுக்கு அங்கே தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட கொடுமைகளே அவர்களுக்கு தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்த்தியது.

நிர்வாகத்திற்லு வால் பிடிக்கிற சங்கங்கள் இருக்கும் சூழலில் அவர்கள் போராட்டத்தை வாழ்க்கையாக கொண்டுள்ள சி.ஐ.டி.யு சங்கத்தை நாடினார்கள். தொழிற்சங்கம் உதயமானது.

தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறை மறுத்தது. நிர்வாகம் சொன்ன காரணத்தையே அரசும் சொன்னது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினார்கள். அடக்குமுறையும் தொடங்கியது, அவதூறுகளும் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை  சாம்சங்கின் ஏவல் நாயாகவே மாறியது. கைது, தடியடி என்று எல்லாமும் நடந்தது. தனியார் இடத்தில் தொழிலாளர்கள் கூடியதைக் கூட தடுக்க முனைந்தது.

மாநில அரசின் செயல்பாடு நிர்வாகத்திற்கு ஆதரவாகவே அமைந்திருந்தது. தொழிற்சங்க பதிவு தொடர்பாக நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தது. பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள் பங்கேற்றாலும் அவர்கள் நிர்வாகம் சொல்வதையே கூறினார்கள்.

திமுக அரசை முழுக்க முழுக்க விமர்சிப்பதையே பிழைப்பாக கொண்ட ஆட்டுக்காரன் உள்ளிட்ட சங்கிகள்  சாம்சங் பிரச்சினையில் மட்டும் அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள். சுமந்து மாதிரியான தரகர்களின் கூச்சல் வேறு.

இத்தனைக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள். பிரச்சினை நீதிமன்றத்துக்கும் சென்றது. மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் மற்ற கோரிக்கைகளில் முன்னேற்றம் இருந்தாலும், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும்  பதிவில் தேக்கம் நீடித்தது.

நீதிமன்றத்தில் கூட நிர்வாகத்தின் குரலைத்தான் அரசு வழக்கறிஞரும் எதிரொலித்தார். ஆறு வாரத்திற்குள்ளாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட இழுத்தடித்தார்கள். காலவரை என்பதைக் கூட தீர்ப்பு சொன்ன நாள் என்பதற்காக தீர்ப்பு இணையத்தில் வெளியான நாள் என்று அவகாசத்தை கூட்டிக் கொண்டார்கள். சாம்சங் என்றாலே ஓ மை காட் என்று மோடி ஓடியதைப் போல தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஓடினார்.

இறுதியாக வேறு வழியின்றி சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு இன்று பதிவு அளிக்கப்பட்டு விட்டது.

சாம்சங் தொழிலாளர்களின் உறுதியான சமரசமற்ற போராட்டமே இந்த  வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

உழைக்கும் மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு இப்பிரச்சினையில் காண்பித்த அணுகுமுறை எரிச்சலையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியது. இதனை புரிந்து கொண்டு இது போன்ற போக்கினை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.



பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தொழிற்சங்கம் செல்லுபடியாகாது என்று கொக்கரித்து வந்த எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள் இந்த பதிவுச்சான்றிதழைப் பார்த்தாவது வாயை மூடிக் கொள்ள வேண்டும்.

லப்பர் பந்து படத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகும் பெண் வீராங்கனை அகிலா பவுண்டரி அடிக்கும் போது எதிர் அணி கேப்டனிடம் வர்ணனையாளர் சொல்வார், “இது ஆஃப் சைடில அடிச்ச மாதிரி இல்ல, உன்னை செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருக்கு”

 


போராட்டத்தை நக்கல் செய்து கொச்சைப் படுத்தியவர்கள் அனைவருக்கும் அந்த வர்ணனையாளர் சொன்னது பொருந்தும்.

 

Sunday, January 26, 2025

பாஜக கோப்பைக்குள் குத்து வெட்டு

 


தமிழ்நாட்டு பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் போட்டியில் உள்ளனர் என்றும் செய்திகள் சொல்கிறது.

அதனால் ஆட்டுக்காரனுக்கு நடுக்கம் வந்து விட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.

"அதிமுகவை கூட்டணிக்கு வரவைக்க எடப்பாடியுடன் பேசினால் போதும், ரெய்டு எல்லாம் அவசியமில்லை"

என்று நயினார் நாகேந்திரன் சொல்ல அதையே பத்திரிக்கையாளர்கள்  கேட்க

ஆட்டுக்காரனுக்கு கோபம் வந்து விட்டது.

"ரெய்டு விடறதுக்கு நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லைங்கன்னா. அடுத்த கேள்வியை கேளுங்க"

என்று எரிச்சலோடு பேசுகிறார்.

தன் தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் ஆளைப் பற்றி பேசுவதா என்ற எரிச்சல் அது.

பிகு: கோப்பைக்குள் சூறாவளி என்பது ஆங்கில சொலவடை. அதை சற்று மாற்றி நான் தலைப்பாக்கியுள்ளேன். 

ஆடு நனையுதென்று ஆட்டுத்தாடியே வருந்தாதே

 


ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி வழக்கம் போல தமிழ்நாட்டின் மீது வன்மம் கக்கியுள்ளது. 


இந்த ஜந்து சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதையெல்லாம்  ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஒரு புறமிருக்க இதன் அக்கறையெல்லாம் போலித்தனமானது. பாஜக செய்ய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்தை இந்த ஜந்து செய்கிறது. 

ஆகவே ஆட்டுத்தாடி ரெவியிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் நீ முதலைக்கண்ணீர் வடிக்காதே! இவ்வளவு மோசமான மாநிலத்துக்கு வெட்டிச்சுமையாய் இருக்காமல் உடனே வெளியேறு.

Saturday, January 25, 2025

ஜனநாயகக் கொடி பறக்கட்டும்

 


இந்தியராய் பிறந்த அனைவருக்கும்
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
அரசியல் சமத்துவம்
கிடைத்திடவும்

கருத்துரிமை, 
எழுத்துரிமை,
பேச்சுரிமை
வழிபாட்டுரிமை,
கிடைப்பதை உறுதி செய்திடவும்

சமத்துவமும் சம வாய்ப்பும் 
அனைவர் மத்தியில் நிலவிடவும்
உறுதியேற்ற
சோஷலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட,
இந்திய ஜனநாயகக் குடியரசு நாட்டின்
மூவர்ணக்கொடி 
அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும்
பறை சாற்றி உயரத்தில் பறக்கட்டும்.

பாழ்படுத்த நினைக்கும் வீணர்களை
வீழ்த்தட்டும் இந்திய ஜனநாயகம்.
காவிக்கொடியை புறந்தள்ளி 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களின்

செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.


உபியில சொல்லுவியா எச்.ராசா?

 


கீழேயுள்ள படத்தை முதலில் பாருங்கள்


உத்திர பிரதேச மாநிலம் மதுராவின் ஒரு பகுதியான விருந்தாவனில் உள்ள " தாகூர் ஸ்ரீ பன்கே  பிகாரி ஜி மகராஜ்  கோயில்" என்றழைக்கப்படும் ஒரு கிருஷ்ணன் கோயில்.

இந்த கோயிலைப் பற்றிய ஒரு செய்தி இன்றைய  ஆங்கில இந்துவில் முதல் பக்கத்தில் வந்திருந்தது. 

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கான FCRA லைசன்ஸை அந்த கோயிலுக்கு உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது.

அன்னை தெரசா நடத்தி வந்த தொழு நோயாளிகளுக்கான சேவை அமைப்புக்களுக்கெல்லாம் லைசன்ஸ் கொடுக்க மறுத்து அவைகளின் செயல்பாட்டை முடக்கிய உள்துறை அமைச்சகம் கோயிலுக்கு மட்டும் கொடுப்பது நியாயமா என்று  கேட்கப்போகிறேன் என்றுதானே  நீங்கள் நினைத்தீர்கள்?

அந்த கேள்வி மனதுக்குள் இருக்கிறதுதான். ஆனால் இந்த பதிவின் நோக்கம் வேறு.

இந்த லைசன்ஸை எதிர்த்துள்ளது யார் தெரியுமா?

அந்த கோயிலின் அறங்காவலர் குழு.

"நாங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. எதற்கு அவர்களாகவே தருகிறார்கள்? ஏற்கனவே இந்த கோயிலை கைப்பற்ற உ.பி.அரசு முயற்சிக்கிறது. அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த லைசன்ஸ் மூலம் கோயிலை கையகப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது"

என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் கோயிலின் பிரதான பூசாரியும் அறங்காவலர் குழு உறுப்பினருமான அசோக் கோஸ்வாமி என்பவர். 

மொட்டைச்சாமியார் அரசுக்கு இந்த கோயிலின் மீது என்ன கரிசனம்?

ரொக்கமாக மட்டும் வங்கிகளிலும் சேர்த்து 480 கோடி ரூபாயும் கிலோக்கணக்கில் தங்க, வைர நகைகளும் உள்ளதாம்.

இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கூச்சல் போடும் எச்.ராசா, உபிக்கு போய் தாகூர் ஸ்ரீ பன்கே  பிகாரி ஜி மகராஜ்  கோயிலை அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மொட்டைச்சாமியாரிடம் சண்டை போடுவாரா? அதற்கான துணிவு அவருக்கு உண்டா? தர்மப் போராளி என்று அவரது பொறுக்கித்தனங்களுக்கு அடைமொழி கொடுத்தவர்களும் உடன் செல்வார்களா?

மாட்டார்கள்.

ஏனென்றால் எச்.ராசாவுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். மொட்டைச் சாமியாருக்கு எதிராக பேசினால் அவருக்கு தமிழ்நாட்டில் இரங்கல் கூட்டம் நடத்துவார்கள் என்று... 

Friday, January 24, 2025

உன் டூப்பா நாற வாய் ஆட்டுக்காரா?

 



முதலில் இந்த காணொளியை பாருங்கள்.

 நேற்று காலையில் எழுதிய பதிவில்தான் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்தை “செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு போன” ஆட்டுக்காரனால்தான் நிறுத்தப்பட்டது என்று அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் விதந்தோந்திக் கொண்டிருப்பதாக எழுதினேன்.



 இப்போது இந்த காணொளி வெளி வருகிறது.

 டங்க்ஸ்டன் திட்டத்தை ஆதரித்து விட்டு, மக்களை வெளியேறச் சொல்லி விட்டு, வேண்டுமானால் சில எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள் என்பது தெனாவெட்டோடு பேசியவனா  திட்டம் ரத்தை செய்ய  வாயை திறந்திருக்கப் போகிறான்!

 மார்க்சிஸ்ட் கட்சி வழி நடத்திய மக்களின் போராட்டம், தமிழக சட்டசபைத் தீர்மானம் ஆகியவை உருவாக்கிய அழுத்தம் காரணமாக திட்டத்தை திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின்பே ஆட்டுக்காரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்.

 முதல் காணொளி உண்மையா அல்லது திட்டத்திற்கு எதிரான ஆட்டுக்காரன் உண்மையா?

 டங்க்ஸ்டன் திட்டத்திற்கு ஆதரவாக முழங்கிய ஆட்டுக்காரந்தான் நிஜம். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவன் இறந்தாலும் கவலையில்லை, நாடு நாசமானாலும் கவலையில்லை என்பதுதான் பாஜகவின் கொள்கை. இப்போது பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஆட்டுக்காரனா வேதாந்தா நிறுவனத்தின் லாபத்துக்கு எதிராக பேசுவான்?

 வேறு வழியில்லாமல் திட்டத்தை ரத்து செய்வது என்ற சூழ்நிலை வந்த பின்பு அரசியலுக்காக போட்டோஷூட்  நாடகம் நடத்தினார்கள். அவ்வளவுதான்.

 ஆட்டோ ஓட்டுனர் வடிவேலுவுக்கு வேண்டுமானால் “வேற வாய், நாற வாய்” என்று இரண்டு வாய்கள் இருக்கலாம். லாப வெறி பிடித்த முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்டுக்காரன் போன்ற சங்கிகளுக்கு இருப்பது ஒரு வாய்தான். அது எப்போதுமே “நாற வாய்”

 

கவரத்தை தூண்டும் ஆரெஸெஸ் ரெவி

 


ஆளுனர் வேலையைத்தவிர வேறு எல்லா எழவையும் செய்து கொண்டிருக்கிற ஆட்டுத்தாடி ஆரென் ரெவி இப்போது மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்த மட்டுமே நேதாஜியை உயர்த்திப் பிடித்துள்ளது.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, பகத்சிங் போன்ற அனைத்து ஆளுமைகளும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் கட்சியினர் போன்ற அரசியல் கட்சிகள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கோழை செல்பி சாவர்க்கர், வாஜ்பாய் போன்ற காட்டிக் கொடுத்த கருங்காலிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா போன்ற துரோகிகளைத் தவிர அனைவரும் சுதந்திரம் பெற காரணம்தான்.

இதிலே ஒருவரை உயர்த்தி இன்னொருவரை சிறுமைப்படுத்துவது அற்பத்தனம், நேதாஜி மற்றும் காந்தி ஆதரவாளர்களிடையே சண்டை மூட்டும் சில்லறைத்தனம்.

மகாத்மா காந்தி கொலைகாரனை துதிக்கும் ஆரென்.ரெவி தன்னை யாராவது அடித்து அதன் மூலம் கலவரத்தை தூண்ட முடியுமா என்று முய்ற்சிப்பது போல தெரிகிறது.

அது நடக்காது.

அடிக்குமள்வுக்கு ரெவி வொர்த்தில்லை. 

Thursday, January 23, 2025

ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டுக்காரனுக்கு சமர்பணம்

 "செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு போன" ஆட்டுக்காரனால்தான் டங்க்ஸ்டன் திட்டம் ரத்தானதென்று கதைத்துக் கொண்டிருக்கும் அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு கீழே உள்ளது.

போராட்டத்தை முழுமையாக விவரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய பதிவை ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டுக்காரனுக்கு சமர்ப்பிக்கிறேன்.




டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து!

ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாமல் போராடிய மக்களின் மகத்தான வெற்றி.
சு. வெங்கடேசன் எம்.பி

அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை உள்ளடக்கிய மதுரை மேலூரின் 2015.51 எக்டர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க இச்செய்தி ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாது உறுதியுடன் போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது. இச்செய்தி வெளியானவுடனாக இத்திட்டத்தால் தமிழர் வரலாற்றுப் பெருமைகள் குவிந்து கிடக்கும் மற்றும் உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க பகுதிகள் அழியக்கூடிய அபாயம் இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக இது தொடர்பான தகவல்களைத் திரட்டி 19.11.2024 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். 21.11.2024 அன்று டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தும் இத்திட்டத்தைக் கைவிடக்கோரி வலியுறுத்தினேன். 3.12.2024 அன்று நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தின் பாதகமான விளைவுகளை எடுத்துரைத்தேன். இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பதிலளித்த ஒன்றிய சுரங்க அமைச்சகம் இத்திட்டத்தை உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தொடருவோம் என உறுதிபடத் தெரிவித்தது.

இதற்கிடையில் தமிழ் நாடு அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் திட்டத்தைத் தொடர்வதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்தது. அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 எக்டர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 எக்டர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்துப் பரப்புரை செய்தோம். ஒருபிடி மண்ணைக்கூட மேலூரில் இருந்து எடுக்க முடியாது என முழங்கினோம்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மூன்று நாட்கள் மகத்தான நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனவரி 7 ஆம் தேதி 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே சென்று போராட்டத்தை முன்னெடுத்தனர். திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பா.ஜ.க.வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது.

எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது.

டங்க்ஸ்டன் ஏல ஒப்பந்தத்தை வேதாந்தாவுக்கு எதிராக மட்டுமல்ல யாருக்கும் தரவிட மாட்டோம் என்னும் உறுதியும், ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்னும் தீரமும் , ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற மக்களிம் நெஞ்சுரமும் இன்று ஒன்றிய அரசை ஆட்டிப் பார்த்திருக்கிறது. அதன் விளைவாகவே ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதாக முழுமையாக அறிவித்துள்ளது. இது உறுதிமிக்க மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. நமது வாழ்வையும், வரலாற்றையும் , வளத்தையும் பாதுக்காக்க நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி.

போராட்டங்களே நம் மண்ணை மீட்கும் . நம் மக்களைக் காக்கும். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாய பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. இப்போதல்ல , எப்போது எந்த அரசும் எங்கள் வாழ்வையும், வளங்களையும் சூரையாட அனுமதிக்க மாட்டோம்.
All reactions:
You, Subba Rao Chandrasekara Rao, Shahul Hameed and 908 others