இந்தியாவை வ;ல்லரசாக்கும்படி இந்த வருட பட்ஜெட் இருக்கும் என்று சொல்கிற மோடி, ஏழை நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியிடம் பிரார்த்திக் கொள்வதாகவும் சொல்கிறார்.
அதற்கு
என்ன பொருள்?
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
இந்தியாவை வ;ல்லரசாக்கும்படி இந்த வருட பட்ஜெட் இருக்கும் என்று சொல்கிற மோடி, ஏழை நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்கும்படி லட்சுமியிடம் பிரார்த்திக் கொள்வதாகவும் சொல்கிறார்.
அதற்கு
என்ன பொருள்?
எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.
சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.
நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.
ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.
*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*
சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது “தொழிற்சங்கம் அமைத்தால் நிறுவனத்தை மூடி விடுவார்கள்” என்று சங்கிகளும் சில உடன் பிறப்புக்களும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எல்.ஐ.சி நிறுவனத்தின் காவல் அரணாக திகழ்கின்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக இந்த முட்டாள்தனமான கூச்சல்களை கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.
அப்போது எழுதிய
தொழிலாளர் போராட்டம் - மூடச்சங்கிகளின் பொய்க்கணக்குகள்” என்ற பதிவின் இணைப்பு இது.
அவசியம் படியுங்கள்.
இந்த பட்டியலில் புதிதாக ஒரு நிறுவனம் இணைந்துள்ளது.
கோவையில் செயல்படுகின்ற ஃபோகஸ் எடுமேடிக் என்ற அமெரிக்க நிறுவனம் திங்கட்கிழமையன்று திடீரென மூடப்பட்டுள்ளது. வெறும் மின்னஞ்சல் மூலமாக தகவல் சொல்லப்பட்டுள்ளது. 1500 ஊழியர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டனர்.
தொழிற்சங்கம் எதுவும் அங்கே இல்லை. அதனால் போராட்டம் காரணமாக நிறுவனம் மூடப்பட்டது என்று சங்கிகள் கதை விட வாய்ப்பில்லாமல் போய் விட்டது.
நடுத்தெருவில் நின்ற ஊழியர்களுக்காக, தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக குவிந்த அந்த ஊழியர்களுக்காக சி.ஐ.டி.யு தலையிட்ட பின்னணியில் ஜனவரி மாதம் பணி செய்தமைக்கான ஊதியத்தையும் ஐந்து வருடம் பணி செய்த ஊழியர்களுக்கு மட்டும் பணிக்கொடை சட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய பணிக் கொடையையும் வருங்கால வைப்பு நிதியில் சேர்க்கப்பட்டுள்ள நிதியையும் மட்டும் தர முன்வந்துள்ளது நிர்வாகம். இதற்கே ஒரு தொழிற்சங்கம் தலையிட வேண்டியிருக்கிறது.
இதுவே அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் இருந்திருந்தால்
ஒரு வேளை நிறுவனம் மூடப்படுவதைக் கூட தவிர்த்திருக்க முடியும்.
அம்போவென்று
தெருவில் நிறுத்தப்ப்பட்ட ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுத்திருக்கலாம்.
இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவு.
சாம்சங் பிரச்சினையில் நிர்வாகத்திற்கு ஆதரவாக கூக்குரல் எழுப்பிய சுமந்து, எஸ்.ஜி.சூர்யா, ஆட்டுக்காரன் உள்ளிட்ட சங்கிகள் யாரும் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. ஒரு வேளை உயிரோடு இருந்தாலும் கூட தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேச மாட்டார்கள். ஆம். அவர்களின் வர்க்க குணாம்சம் அதுதான்.
மீண்டும் அழுத்தமாக சொல்கிறேன்.
ஒரு தொழிற்சங்கம் இருப்பதுதான், அதுவும் செங்கொடி சங்கமாக இருப்பதுதான் அந்த ஊழியர்களுக்கு மட்டுமல்ல நிறுவனத்திற்கும் பாதுகாப்பு.
தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையால் உத்திர பிரதேச மாநிலத்தின் நகரங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் “ சமூக நீதியின் பெருமை – தந்தை பெரியாரின் தமிழ்நாட்டு மண்” என்று ஹிந்தியில் தந்தை பெரியார் படத்தோடு பேனர் வைக்க முடியுமா?
எஸ்.வி.சேகர்
அப்பாவின் பெயரை தெருவுக்கு சூட்டியதை விட கொடுமை இது.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு தீவிர சங்கி போட்டுள்ள பதிவு கீழே . .
காவிக்கண்ணாடி அணிந்துள்ளதன் விளைவு இது. அதனால் நான் காவிக் கலரில் சுழித்து வைத்துள்ளேன்.
போன திங்கட்கிழமை அன்று நடைபெற்ற சம்பவம் இது.
தீக்கதிர் சென்னை பதிப்பின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், முகநூலில் அந்நாள், இந்நாள் கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு நண்பரோடு நடந்த உரையாடலை பகிர்ந்து கொண்டிருந்தார்.
தன் பக்கத்தை இறுக்கமாக பூட்டி வைத்திருக்கும் மூத்த்த்த மாலன் அங்கே சம்மனின்றி ஆஜராகி அப்போதுள்ளவர்கள் போல இப்போது இல்லை என்று பட்டியல் போட்டு கடைசியில் கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவதில் வந்து நின்றார்.
“அப்போதிருந்த
ஊடகவியாளர்கள் மாதிரி இப்போதும் இல்லை. மோசமான ஊடகவியலாளருக்கு உம்மை உதாரணம் காண்பிக்கலாம்.
உங்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேச அருகதை கிடையாது. எங்கள் மகத்தான் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம்
சொல்வது போல பணத்திற்காகவும் விருதுகளுக்காகவும்
நீரெல்லாம் பேனாவை வாடகைக்கு விடும் வியாபாரி” என்று சூடாகவே பின்னூட்டம் எழுதினேன்.
அவருக்கு
கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
என
நான் திருப்பி கொடுக்க
சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஒரு வழியாக பதிவு செய்யப்பட்டு விட்டது. உறுதியோடு போராடிய தொழிலாளர்களுக்கு இறுதி வெற்றி கிடைத்து விட்டது.
அவ்வளவு சுலபமாக வந்து விடவில்லை இந்த வெற்றி . . .
ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது என்பதும் போராடுவதும் என்பதும் எப்போதுமே எளிதானது அல்ல. சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனத்தில் மிகவும் கடினமான ஒன்று. தொழிலாளர்களுக்கு அங்கே தொடர்ச்சியாக இழைக்கப்பட்ட கொடுமைகளே அவர்களுக்கு தொழிற்சங்கத்தின் அவசியத்தை உணர்த்தியது.
நிர்வாகத்திற்லு வால் பிடிக்கிற சங்கங்கள் இருக்கும் சூழலில் அவர்கள் போராட்டத்தை வாழ்க்கையாக கொண்டுள்ள சி.ஐ.டி.யு சங்கத்தை நாடினார்கள். தொழிற்சங்கம் உதயமானது.
தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறை மறுத்தது. நிர்வாகம் சொன்ன காரணத்தையே அரசும் சொன்னது.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினார்கள். அடக்குமுறையும் தொடங்கியது, அவதூறுகளும் தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சாம்சங்கின் ஏவல் நாயாகவே மாறியது. கைது, தடியடி என்று எல்லாமும் நடந்தது. தனியார் இடத்தில் தொழிலாளர்கள் கூடியதைக் கூட தடுக்க முனைந்தது.
மாநில அரசின் செயல்பாடு நிர்வாகத்திற்கு ஆதரவாகவே அமைந்திருந்தது. தொழிற்சங்க பதிவு தொடர்பாக நிர்வாகத்தின் நிலைப்பாட்டை ஆதரித்தது. பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள் பங்கேற்றாலும் அவர்கள் நிர்வாகம் சொல்வதையே கூறினார்கள்.
திமுக அரசை முழுக்க முழுக்க விமர்சிப்பதையே பிழைப்பாக கொண்ட ஆட்டுக்காரன் உள்ளிட்ட சங்கிகள் சாம்சங் பிரச்சினையில் மட்டும் அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள். சுமந்து மாதிரியான தரகர்களின் கூச்சல் வேறு.
இத்தனைக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள். பிரச்சினை நீதிமன்றத்துக்கும் சென்றது. மூன்று அமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில் மற்ற கோரிக்கைகளில் முன்னேற்றம் இருந்தாலும், வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் பதிவில் தேக்கம் நீடித்தது.
நீதிமன்றத்தில் கூட நிர்வாகத்தின் குரலைத்தான் அரசு வழக்கறிஞரும் எதிரொலித்தார். ஆறு வாரத்திற்குள்ளாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட இழுத்தடித்தார்கள். காலவரை என்பதைக் கூட தீர்ப்பு சொன்ன நாள் என்பதற்காக தீர்ப்பு இணையத்தில் வெளியான நாள் என்று அவகாசத்தை கூட்டிக் கொண்டார்கள். சாம்சங் என்றாலே ஓ மை காட் என்று மோடி ஓடியதைப் போல தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஓடினார்.
இறுதியாக வேறு வழியின்றி சாம்சங் தொழிலாளர் சங்கத்திற்கு இன்று பதிவு அளிக்கப்பட்டு விட்டது.
சாம்சங் தொழிலாளர்களின் உறுதியான சமரசமற்ற போராட்டமே இந்த வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உழைக்கும் மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு இப்பிரச்சினையில் காண்பித்த அணுகுமுறை எரிச்சலையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியது. இதனை புரிந்து கொண்டு இது போன்ற போக்கினை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும்.
பன்னாட்டுக் கம்பெனிகளிடம் தொழிற்சங்கம் செல்லுபடியாகாது என்று கொக்கரித்து வந்த எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள் இந்த பதிவுச்சான்றிதழைப் பார்த்தாவது வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
லப்பர் பந்து படத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகும் பெண் வீராங்கனை அகிலா பவுண்டரி அடிக்கும் போது எதிர் அணி கேப்டனிடம் வர்ணனையாளர் சொல்வார், “இது ஆஃப் சைடில அடிச்ச மாதிரி இல்ல, உன்னை செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருக்கு”
போராட்டத்தை
நக்கல் செய்து கொச்சைப் படுத்தியவர்கள் அனைவருக்கும் அந்த வர்ணனையாளர் சொன்னது பொருந்தும்.
தமிழ்நாட்டு பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் நயினார் நாகேந்திரனும் வானதி சீனிவாசனும் போட்டியில் உள்ளனர் என்றும் செய்திகள் சொல்கிறது.
அதனால் ஆட்டுக்காரனுக்கு நடுக்கம் வந்து விட்டது என்பது நன்றாகவே தெரிகிறது.
"அதிமுகவை கூட்டணிக்கு வரவைக்க எடப்பாடியுடன் பேசினால் போதும், ரெய்டு எல்லாம் அவசியமில்லை"
என்று நயினார் நாகேந்திரன் சொல்ல அதையே பத்திரிக்கையாளர்கள் கேட்க
ஆட்டுக்காரனுக்கு கோபம் வந்து விட்டது.
"ரெய்டு விடறதுக்கு நயினார் நாகேந்திரனுக்கு அதிகாரம் இல்லைங்கன்னா. அடுத்த கேள்வியை கேளுங்க"
என்று எரிச்சலோடு பேசுகிறார்.
தன் தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் ஆளைப் பற்றி பேசுவதா என்ற எரிச்சல் அது.
பிகு: கோப்பைக்குள் சூறாவளி என்பது ஆங்கில சொலவடை. அதை சற்று மாற்றி நான் தலைப்பாக்கியுள்ளேன்.
ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி வழக்கம் போல தமிழ்நாட்டின் மீது வன்மம் கக்கியுள்ளது.
ஆகவே ஆட்டுத்தாடி ரெவியிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் நீ முதலைக்கண்ணீர் வடிக்காதே! இவ்வளவு மோசமான மாநிலத்துக்கு வெட்டிச்சுமையாய் இருக்காமல் உடனே வெளியேறு.
செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.
கீழேயுள்ள படத்தை முதலில் பாருங்கள்
இந்த கோயிலைப் பற்றிய ஒரு செய்தி இன்றைய ஆங்கில இந்துவில் முதல் பக்கத்தில் வந்திருந்தது.
வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கான FCRA லைசன்ஸை அந்த கோயிலுக்கு உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ளது.
அன்னை தெரசா நடத்தி வந்த தொழு நோயாளிகளுக்கான சேவை அமைப்புக்களுக்கெல்லாம் லைசன்ஸ் கொடுக்க மறுத்து அவைகளின் செயல்பாட்டை முடக்கிய உள்துறை அமைச்சகம் கோயிலுக்கு மட்டும் கொடுப்பது நியாயமா என்று கேட்கப்போகிறேன் என்றுதானே நீங்கள் நினைத்தீர்கள்?
அந்த கேள்வி மனதுக்குள் இருக்கிறதுதான். ஆனால் இந்த பதிவின் நோக்கம் வேறு.
இந்த லைசன்ஸை எதிர்த்துள்ளது யார் தெரியுமா?
அந்த கோயிலின் அறங்காவலர் குழு.
"நாங்கள் லைசன்ஸ் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. எதற்கு அவர்களாகவே தருகிறார்கள்? ஏற்கனவே இந்த கோயிலை கைப்பற்ற உ.பி.அரசு முயற்சிக்கிறது. அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த லைசன்ஸ் மூலம் கோயிலை கையகப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது"
என்று போர்க்குரல் எழுப்பியுள்ளார் கோயிலின் பிரதான பூசாரியும் அறங்காவலர் குழு உறுப்பினருமான அசோக் கோஸ்வாமி என்பவர்.
மொட்டைச்சாமியார் அரசுக்கு இந்த கோயிலின் மீது என்ன கரிசனம்?
ரொக்கமாக மட்டும் வங்கிகளிலும் சேர்த்து 480 கோடி ரூபாயும் கிலோக்கணக்கில் தங்க, வைர நகைகளும் உள்ளதாம்.
இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் கூச்சல் போடும் எச்.ராசா, உபிக்கு போய் தாகூர் ஸ்ரீ பன்கே பிகாரி ஜி மகராஜ் கோயிலை அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மொட்டைச்சாமியாரிடம் சண்டை போடுவாரா? அதற்கான துணிவு அவருக்கு உண்டா? தர்மப் போராளி என்று அவரது பொறுக்கித்தனங்களுக்கு அடைமொழி கொடுத்தவர்களும் உடன் செல்வார்களா?
மாட்டார்கள்.
ஏனென்றால் எச்.ராசாவுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். மொட்டைச் சாமியாருக்கு எதிராக பேசினால் அவருக்கு தமிழ்நாட்டில் இரங்கல் கூட்டம் நடத்துவார்கள் என்று...
முதலில்
இந்த காணொளியை பாருங்கள்.
ஆளுனர் வேலையைத்தவிர வேறு எல்லா எழவையும் செய்து கொண்டிருக்கிற ஆட்டுத்தாடி ஆரென் ரெவி இப்போது மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்த மட்டுமே நேதாஜியை உயர்த்திப் பிடித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் கட்சியினர் போன்ற அரசியல் கட்சிகள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
கோழை செல்பி சாவர்க்கர், வாஜ்பாய் போன்ற காட்டிக் கொடுத்த கருங்காலிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா போன்ற துரோகிகளைத் தவிர அனைவரும் சுதந்திரம் பெற காரணம்தான்.
இதிலே ஒருவரை உயர்த்தி இன்னொருவரை சிறுமைப்படுத்துவது அற்பத்தனம், நேதாஜி மற்றும் காந்தி ஆதரவாளர்களிடையே சண்டை மூட்டும் சில்லறைத்தனம்.
மகாத்மா காந்தி கொலைகாரனை துதிக்கும் ஆரென்.ரெவி தன்னை யாராவது அடித்து அதன் மூலம் கலவரத்தை தூண்ட முடியுமா என்று முய்ற்சிப்பது போல தெரிகிறது.
அது நடக்காது.
அடிக்குமள்வுக்கு ரெவி வொர்த்தில்லை.
"செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு போன" ஆட்டுக்காரனால்தான் டங்க்ஸ்டன் திட்டம் ரத்தானதென்று கதைத்துக் கொண்டிருக்கும் அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு கீழே உள்ளது.
போராட்டத்தை முழுமையாக விவரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் எழுதிய பதிவை ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டுக்காரனுக்கு சமர்ப்பிக்கிறேன்.
டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து!