Monday, August 5, 2019

காஷ்மீருக்கு உயிரில்லை



ரோஜாக்களில் மணம் இல்லை,
பனிச்சிகரங்களில் குளிர் இல்லை,
தவழும் மேகங்களில் நீர் இல்லை,
பயணிகள் இல்லா "தால்" ஏரியில்
மலர்ச்சி  இல்லை.

துப்பாக்கிகளின் கந்தக நெடியில்
மக்கள் மனதில் நிம்மதியில்லை.

ஜனநாயகம் முடக்கப்பட்டு,
தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு,
அச்சத்தை உருவாக்க
குவிக்கப்பட்ட ராணுவத்தால்,
துப்பாக்கிகளின் 
கந்தக நெடியால்
காஷ்மீருக்கே 
இப்போது உயிரில்லை. 



1 comment:

  1. Remarkable! Its truly awesome article, I have got much clear idea about from this piece of writing.

    ReplyDelete