Thursday, August 15, 2019

சுதந்திரமாய் கொடி பறக்கட்டும் . . .


சுதந்திரம் என்ன
இனிப்பா, காரமா 
என்றே கேட்பவர்கள்,

சுதந்திரம் கேட்டு
போராடியவரை
காட்டிக் கொடுத்தவர்கள்,

 மன்னிப்பு கேட்டு
மகாராணியிடம் மண்டியிட்ட
விசுவாசிகள்,

சுதந்திர தாகத்தோடு
போராடிய முதியவரை
சுட்டுக் கொன்று
குருதி குடித்தவர்கள்,

ஒரு மாநிலத்தையே
முடக்கி வைத்து
திறந்தவெளிச் சிறைச்சாலை
திறந்து வைத்தவர்கள்,

மூவர்ணக் கொடியை
காவிக் கொடியாய் மாற்றி
ஏற்றி வைக்குமுன்பாக
கயிற்றை அறுத்தெறிந்து
சுதந்திரமாக பறக்கட்டும்
இந்தியக் கொடி . . .

No comments:

Post a Comment