Saturday, August 3, 2019

காஷ்மீரை அழிக்கப் போகிறார்களா?


காஷ்மீர் பற்றி கிடைக்கும் தகவல்கள் எதுவுமே நல்லதாக இல்லை.

ஏற்கனவே  மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு பாதுகாப்புப் படைகள் குவிந்துள்ள காஷ்மீரில் கூடுதலாக பத்தாயிரம் பேரை இறக்கியுள்ளனர்.

அமர்நாத் யாத்திரையை முன் கூட்டியே முடித்து பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் உடனடியாக வீடு திரும்பச் சொல்லி உள்ளனர்.

பாகிஸ்தான் தாக்கும் அபாயம் உள்ளதாக சொல்லிக் கொண்டாலும் உலா வரும் இன்னொரு செய்தி அரசின் நோக்கம் என்னவென்று அம்பலப்படுத்துகிறது.

ஜம்முவை தனி மாநிலமாக அறிவித்து விட்டு காஷ்மீரையும் லடாக்கையும் மத்தியரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர யூனியன் பிரதேசமாக்குவது என்பது திட்டம் என்று உலா வரும் செய்திகள் சொல்கிறது.

அப்படிச் செய்தால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.

ஏற்கனவே காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்து அன்னியமாகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களது நம்பிக்கையைப் பெறுவதற்கு உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் முந்தைய காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. மோடி அரசோ நம்பிக்கையை சிதைக்கிற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரை புதிய டெல்லி சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வது என்பது கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாகும்.

அதானியும் அம்பானியும் காஷ்மீரில் உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அந்த மாநிலத்தையே தீயிட்டு கொளுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

மூடனும் முரடனுமாக ஒரு பிரதமர் இருந்தால் இப்படித்தான் நடக்கும்!

No comments:

Post a Comment