Thursday, August 29, 2019

பிழைக்கத் தெரிந்த புத்திசாலிகள்


ஒருவர் ஆளுனரானார்.
ஒருவர் வெளிநாட்டு தூதரானார்.
ஒருவர் மந்திரியானார்.
ஒருவர் சட்டமன்ற உறுப்பினார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த
இன்னொருவரும் 
மேலிடத்தின் மனதுக்கேற்று
நடந்து கொண்டு 
ஓய்வு பெற்ற மறு நாளே
மற்றொரு பதவி பெற்றார்.

சட்டப்படியும் தர்மப்படியும்
நடந்து கொண்டால் 
பென்ஷன் தவிர வேறேது உண்டு?

நாயும் பிழைக்கும் 
இப்பிழைப்பென்பீர்!
நாய் விற்ற காசு
என்றைக்கு குரைத்துள்ளது?


No comments:

Post a Comment