Thursday, August 1, 2019

வினாயகர் சிலையும் சப்பாணியும்

காலையில் இன்றைய நாளிதழ் வரத் தாமதமானதால் நேற்றைய, அதற்கு முந்தைய நாள் இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். 

அப்போது கண்ணில் பட்ட ஒரு செய்தி கீழே உள்ளது.

வினாயகர் சிலைகள் எப்படி அமைய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள உத்தரவுகள் பல.

சுட்ட களி மண்ணிலோ அல்லது ப்ளாஸ்டர் ஆப் பாரீஸிலோ சிலைகள் அமையக்கூடாது.

ரசாயன வர்ணம் பூசக் கூடாது,

அதிக உயரம் கூடாது.

சிலை வைக்கும் இடத்திலோ அல்லது கரைக்கும் இடத்திலோ குப்பை கூடாது, இத்யாதி, இத்யாதி.



வருடா வருடம் இவை அனைத்தையும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

கோபாலகிருஷ்ணன் என்று கூப்பிடச் சொன்ன சப்பாணியை எப்படி யாரும் மதிப்பதில்லையோ, அது போலத்தான் இந்த கட்டளைகளுக்கான மதிப்பும்.

கோபால கிருஷ்ணன் போல அரசு என்று சப்பென்று அடிக்குமோ?

1 comment:

  1. அடிச்சிட கிடிச்சிட போறானுங்க! ஒவர் எதிர்பார்ப்பு தோழரே

    ReplyDelete