Thursday, August 31, 2017

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மோடி

ரிசர்வ் வங்கி அறிக்கை மிகத் தெளிவாக செல்லா நோட்டு விவகாரத்தால் மோடிதான் செல்லா நோட்டாகி விட்டார் என்பதை தோலுரித்து விட்டது.


மோடியின் வீர வசனங்கள் மேலே உள்ளது.

மோடி தன்னை உயிரோடு கொளுத்திக் கொள்ள வேண்டாம்.
தூக்கில் தொங்க வேண்டாம்,
உங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம்
எனது நடவடிக்கை தோற்றுப் போய் விட்டது என்ற உண்மையை
ஒப்புக் கொள்ளக் கூட வேண்டாம்.

இந்தியாவில் இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் ஊர், சாரி,
உலகம் சுற்றக் கிளம்பி விடவும்.

இந்தியாவில் இருந்து கொண்டு புதிய புதிய இந்தியாக்களை பிரசவம்
செய்து மக்களை சவமாக்குவதற்குப் பதிலாக 
ஜாலியாக செல்பி எடுத்துக் கொண்டு 
நீங்களும் நிம்மதியாக இருங்கள்,
எங்க்ளையும் நிம்மதியாய் இருக்க விடுங்கள்
 

1 comment:

  1. அப்போ பாஜக கட்டுப்பாடு இல்லாமல் ரிசர்வ் வங்கி சுயமாக செயல்பட முடிகின்றது

    ReplyDelete