Monday, August 28, 2017

உடைக்கப்பட்ட பிள்ளையார் . .ஒளிந்து கொண்ட எச்.ராசா கூட்டம்



ஒடுக்கப்பட்ட மக்களை தங்களின் கோயில்களில் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். 
நாங்களே தனியாக வழிபட்டுக் கொள்கிறோம் என்று தனியாக ஒரு கோயில் என்று அமைத்தால் அதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

முன்பு விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்ததுதான் இப்போது காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நல்லூரிலும் நடந்துள்ளது.

வினாயகர் சதுர்த்தி என்று போதையில் சாலையில் வேகமாகப் போன இரு வாலிபர்களை "பொறுமையாக போங்க தம்பிங்களா" என்று சொன்ன காரணத்துக்காக 

பாமக கட்சிக்காரர்கள் கூட்டமாக திரண்டு வந்து அந்த காலனி மக்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தி உள்ளனர்.
வீடுகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன.
ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இதைத்தவிர

தலித் மக்கள் அங்கே நிறுவியிருந்த

வினாயகர் சிலையையும் 

சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கம் போல விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோரே களம் இறங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட தலித் மக்கள் இந்துக்கள்தானே!
உடைக்கப்பட்டது இந்துக் கடவுள் வினாயகர்தானே!

எச்.ராசா, தமிழிசை வகையறாக்கள் அமைதியாக இருப்பது ஏனோ?
ஊர் ஊராய் போய் வினாயகர் விழாவில் கலந்து கொள்ளும் வீரத்துறவி கண்ணில் இது படவில்லையா?

அவர்கள் சர்வ அங்கங்களையும் மூடிக் கொண்டு எப்போதும் போல அமைதியாய்த்தான் இருப்ப்பார்கள்.

ஏனென்றால் தாக்கப்பட்டவர்கள் தலித்கள்.
பாமக வோடு கூட்டணி வைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

5 comments:

  1. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழக்கம் போல விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியோரே களம் இறங்கி உள்ளனர்.*** when hindus are killed in kerala and kashmir and their culture vandalized by thugs, your gang is silent. That is returned now. Patriots do not support anti nationals.

    ReplyDelete
    Replies
    1. // Patriots do not support anti nationals// பிள்ளையாரை கொண்டாடுகிற தலித் மக்களும் தேச விரோதிகளே - இதுதானே சொல்ல வருகிறீர்கள்? உங்கள் காவி நிறத்திற்குள் ஒளிந்திருக்கிற தலித் விரோதக் கொள்கையை உரக்கச் சொன்னதற்கு நன்றி மிஸ்டர் அனானி

      Delete
    2. பின்னூட்டம் எழுதப்பட்ட நேரம் காலை 4.49 மணி. எழுந்துக்கற போதே எவன் குடியை கெடுப்பது என்ற புத்தியில்தான் எழுந்திருப்பீர்கள் போல. நல்லா இருய்யா

      Delete
  2. your post 8.25 on Monday...

    office pogum mun...
    kalaiyeleye
    vaanthi
    yedhuthuviteergal...

    ReplyDelete
  3. அலுவலகம் செல்லும் முன்பு
    அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கும்
    அதிகாலை எழுந்தவுடன்
    நச்சை கக்குவதற்கும்
    வித்தியாசம் உள்ளது.

    நீ எப்போதும் வாந்தியைத்தான்
    குடிப்பாய் போல.

    ReplyDelete