Sunday, May 26, 2013

சொர்க்கத்தை அனுபவித்தேன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் சென்றிருந்தேன்.
அது பற்றி நாளை எழுதுகிறேன்.

திரைப்படம் முடிந்து அரங்கிற்கு வெளியே வந்தால்
நல்ல மழை.

நூற்றிப் பத்து, நூற்றி பதிமூன்று டிகிரிகள் வரை கொளுத்திக்
கொண்டிருக்கும் வேலூரில் மழை. ஆச்சர்யமாகவே இருந்தது.
ஆனால் மழைக்காக ஒதுங்கி நிற்காமல் பதட்டமே இல்லாமல்
நிதானமாக நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்தேன்.

ஆஹா!

என்ன இனிமை! என்ன இனிமை!!

மேலே தண்ணீர் தூறலாய் விழுந்து கொண்டிருக்க, குளிர் காற்று
மேலே வீச, மழைக்கு பயந்தவர்கள் ஒதுங்கி இருக்க சாலையில்
குறைவான போக்குவரத்தில்  அந்த பத்து நிமிட பயணம்
உண்மையிலேயே சொர்க்கம்.

வேலூர் வெயிலூர்தான்.

எப்போதாவது குற்றாலம் போலவும் மாறும்.
இன்று அந்த நாள்,
இனிமையான நாள்....

3 comments:

  1. Lovely Description... Small write up but enjoyed the feel of rain..

    ReplyDelete
  2. திருச்சியில் என்று வருமோ அந்நாள் ....

    ReplyDelete