Friday, May 31, 2013

எச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்?

வெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூர் என்று எங்கள்
ஊரை இனியும் யாரும் அழைக்காதீர்....

நேற்று எங்கள் ஊரில் 98 டிகிரிதான் அதிக பட்ச வெயில்.

ஆனால்

மதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் எவ்வளவோ
அதிகம்.

இன்று 

மாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய கடுமையான
மழை, இதோ, இன்னும், ஒன்பதரை மணி வரை கூட
பெய்து கொண்டே இருக்கிறது.

ஆகவே இனி யாரும் எங்களூரை வெயிலூர் என்று
கிண்டல் செய்யாதீர்கள்.

செய்தால்

நல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யுமாம் மழை
என்பது வள்ளுவர் வாக்கு.

நாங்கள் ஏராளமான நல்லவர்கள் உள்ளதால்தான்
தொடர்ந்து மழை பெய்கிறது. ஆகவே நல்லவர்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள்.

அது உங்களுக்கு நல்லதல்ல, ஜாக்கிரதை.

பின் குறிப்பு

என் மைன்ட் வாய்ஸ் எனக்கே கேட்கிறது.
ஒரு நாள் மழைக்கு இவ்வளவு பில்ட் அப்பா?


1 comment:

  1. ஹா... ஹா... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete