Saturday, May 25, 2013

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா?

இன்னிசை வேந்தன் டி.எம்.எஸ் அவர்களின் மரணம் பலரையும்
வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது முகநூலில் அவருக்கு
குவியும் அஞ்சலிச் செய்திகளே சான்று. 

அவரது பாடல்களால் ஈர்க்கப்படாதவர்கள் யார்தான் இருக்க
முடியும்?

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தன் கம்பீரக் குரலால் அனைவரையும்
கட்டிப் போட்டவர் அல்லவா அவர்?

எனக்கு ஒரு பயம் தோன்றியதை பதிவு செய்யவே எழுதுகிறேன்.
இனிய பல பாடல்களைப் பாடி காலங்களில் என்றும் வசந்த காலமாகவே
நெஞ்சில் நிலைத்துள்ள அமரர் பி.பி.எஸ் அவர்கள் மறைந்தபோது
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அபத்தமாக எழுதி ஆத்திரத்தை
ஏற்படுத்தியது.

இப்போதாவது அந்த பத்திரிக்கை கவனமாக செயல்படுமா?

பொறுப்போடு எழுதுமா?

No comments:

Post a Comment