Saturday, April 23, 2011

வாக்கு எண்ணிக்கையில் மோசடி

வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது 
என்று நான் முன்பு 13  மார்ச்  அன்று   எழுதியிருந்தேன். பெட்டியில் 
வரும் எண்ணிக்கையை காகிதத்தில்  எழுதும் போது முகவர்கள் 
எச்சரிக்கையாக இல்லையென்றால்  ஒரு வேட்பாளருக்கு விழும் 
வாக்குகளை வேறொருவருக்கோ அல்லது கூடவோ குறைத்து 
எழுத முடியும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். 

இப்போது அந்த வாய்ப்பை தேர்தல் ஆணையம்  தடுத்து விட்டது. 
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேசைக்கும் ஒரு  வெப் காமரா
வைக்கப்படும் என்றும்  ஒவ்வொரு சுற்றிலும் ஒவ்வொரு 
வேட்பாளருக்கும்  விழும் வாக்குகள் காமராவில் பதிவு செய்யப்படும்
என்றும்  தற்போது  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
உண்மையிலேயே தேர்தல் ஆணையம் உட்கார்ந்து யோசிக்கிறது
என்பதற்கு இது ஒரு உதாரணம்.  வாழ்த்துக்கள்.
சாமானியனின்  இரு சந்தேகங்கள் :

இந்த அறிவிப்பைக் கண்டித்து கலைஞர்  ஏன்  இன்னும்  அறிக்கை 
விடவில்லை. உடன்பிறப்புக்களுக்கு கடிதம் எழுதவில்லை? 

இப்படியெல்லாம் செய்தால் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம்
எப்படி வெற்றி பெற முடியும்?  


பின் குறிப்பு : என் மகன் என்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல். மைக்ரோ 
அப்சர்வராக பணியாற்ற போய் விட்டதால் தேர்தல் தினத்தன்று நான் 
வீட்டில் இல்லை. எங்களுக்கான வாக்குச்சாவடி எங்கள் வீட்டிற்கு 
எதிரில் உள்ள பள்ளிக்கூடம். நடப்பதற்கு மிகவும் சிரமப்படும் 
எனது மாமியாரால் சாலையை கடந்து வாக்குச்சாவடிக்கு போவது 
என்பது மிகவும் கஷ்டம். ஆகவே எனது மாமனார் ஒரு ஆட்டோவை
ஏற்பாடு செய்து சாலையை கடக்க வைத்து வாக்களிக்க வைத்தார். அதற்கு அவர் இருபது ரூபாய் செலவு செய்தார். 

இவ்வளவு சிரமததோடும் எதிர்பார்ப்போடும் வாக்களிக்கும் 
மக்களை எதிர்கால ஆட்சியாளர்களாவது ஏமாற்றாமல் 
இருக்க வேண்டும்.  
   

No comments:

Post a Comment