Tuesday, April 26, 2011

சாலைகளை சீரமைக்க வேலூர் சத்துவாச்சாரி நகராட்சித் தலைவரின் கணவர் ஜப்பான் பயணம்

நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானில்  எவ்வளவு வேகமாக சாலைகளை  சீரமைத்துள்ளார்கள்  என்பதைக் காண்பிக்கும் 
புகைப்படங்கள் கீழே  உள்ளது. ஆறு நாட்களுக்குள்  நடந்துள்ள 
அற்புதப்பணி  உண்மையிலேயே பாராட்டத்தக்கது.  பொறாமை வரவில்லை  என்றால்  நாம் மனிதர்களே  இல்லை. 

 






ஆனால்  நம் ஊர்களில் என்ன நிலை? ஒன்று சாலை போடவே மாட்டார்கள்.  போட்டாலும் ஒரு மழைக்குக் கூட தாங்காத 
பாடாவதி சாலைகளாகத்தான்  இருக்கும்.  

வேலூரின் ஒரு பகுதியான சத்துவாச்சாரி நகராட்சியில்  பிப்ரவரி
மாதம் புதிய சாலைகள் போடத்தொடங்கினார்கள்.  மாதங்கள் சில
ஆன போதும்  பல சாலைகள் போடும் பனி இன்னும் முடியவே 
இல்லை.  இப்போதும்  எப்படி உள்ளது என்று பாருங்கள். 





 

 இது   வெறும் ஒரு சோற்றுப் பதம்தான். நகராட்சி முழுதும்  இது 
போன்ற சாலைகள்  வாகனங்களின் டயர்களை பதம் பார்த்துக் 
கொண்டுள்ளது.  இதிலே மண் மூடியிருப்பது என் வீட்டின் முன்பு 
உள்ள சாலை.  கொத்திப் போடப்பட்ட சாலை, கற்கள் நிரவப்பட்ட 
சாலை என்ற நிலையிலிருந்து  மண் மூடிக் கிடக்கும் சாலை என்ற
நிலைக்கு வர மூன்று மாதங்கள்  ஆகியுள்ளது. முழுமையான சாலை
என்றாகும் என்பது தெரியவில்லை. 

சத்துவாச்சாரி நகராட்சியின் தலைவர் திமுக வைச்சேர்ந்த பெண்மணி. 
அவரது கணவர் மாவீரன் பட்டம் பெற்ற ஒன்றியச்செயலாளர்தான் 
நடைமுறையில்  தலைவர். ஒரு வேளை காங்கிரஸ் வேட்பாளர் 
ஞானசேகரனை  தோற்கடிக்க உள்குத்து வேலையா என்று தெரியவில்லை.  

ஆனால் ஒன்று ஜப்பானில் ஆறு நாட்களில் சாலை போட்டு முடித்து
விட்டார்கள்  என்பதை மட்டும் யாரும் தயவு செய்து அவரிடம் சொல்லி விடாதீர்கள். ஏனென்றால்  எப்படி விரைவாக சாலை போடுவது என்று
ஜப்பான் போய் பார்த்து விட்டு வருகின்றேன் என அவர் கிளம்பினாலும் 
கிளம்பி விடுவார். 


 

2 comments:

  1. நல்ல பதிவு.
    கிளம்பினாலும் கிளம்பி விடுவார்கள்.

    ReplyDelete