Thursday, January 24, 2019

ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் உருக்கமான நினைவலைகள்.




ஒரிஸாவில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்று முக நூலில் பதிவிட்டிருந்ததை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். இந்தியாவின் கறுப்பு தினமான கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் படுகொலை பற்றிய அந்த பதிவு உள்ளத்தை உருக்குவதாக இருந்திருந்தது.

திரு ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி அவர் பதிவை தமிழாக்கம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.










இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.  கண் சிமிட்டும் நேரம் போல கடந்து விட்டன.

1999 ம் வருடம் இதே நாளில்தான் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் பிலிப் (பத்து வயது), டிமோத்தி (ஆறு வயது) ஆகியோர் கந்துஜார் மாவட்டத்தில் மனோஹர்பூர் என்ற கிராமத்தில் தங்களின் ஸ்டேஷன் வேகன் வேனில் தூங்கிக் கொண்டிருக்கையில் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

அந்த சமயத்தில் நான் அருகிலிருந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதியாகவும் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மயூர்பஞ்ச் மாவட்டத்தின் தலைநகரான பரிபாடாவில்தான் கிரஹாம் ஸ்டெய்ன்ஸூம் அவர் குடும்பத்தினரும் வசித்து வந்ததால் அவரை நான் நன்கு அறிவேன்.

கிரஹாம், அவரது மனைவி கிளாடிஸ், மகள் எஸ்தர், இரண்டு மகன்கள் பிலிப்  மற்றும் டிமோத்தி ஆகியோர் அந்த கோரமான கொலை நடப்பதற்கு முப்பது மணி நேரத்திற்கு முன்பாகத்தான் எங்கள் வீட்டிற்கு வந்து சில மணி நேரங்களை எங்களோடு கழித்து விட்டுச் சென்றனர் என்பதை வேதனையோடு நினைத்துப் பார்க்கிறேன்.

அவர் எப்படி தன் தாய்நாடான ஆஸ்திரேலியாவிலிருந்து மயூர்பஞ்ச் வந்து சேர்ந்தார் என்பதை அவரோடு விவாதித்து மகிழ்ந்திருக்கிறேன். அவரால் ஒடியா மற்றும் சந்தாலி மொழிகளில் சரளமாக பேச முடியும்.

கிரஹாம் ஒரு உன்னதமான ஆத்மா. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை செய்வதிலும் அவர்களுக்கான மறு வாழ்விலும் அவர் தன்னலமின்றி பாடுபட்டு வந்தார். அவரது அர்ப்பணிப்பு மிக்க பணியை பல முறை அருகிலிருந்து பார்த்து “இந்த மனிதனால்  எவ்வாறு இப்படி இருக்க முடிகிறது” என்று வியந்து போயிருக்கிறேன்.

சம்பவம் பற்றி அறிந்ததும் நானும் என்னுடைய காவல்துறை கண்காணிப்பாளரும் உடனே அங்கே விரைந்தோம். மாவட்டத்தின் இன்னொரு பக்கத்திலிருந்த இருந்த அப்பகுதிக்குச் செல்ல நான்கு மணி நேர பயணமானது.

நான் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கிப் போனேன். தற்காலிக சவப்பெட்டிகளை தயார் செய்தோம். கட்டாக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்ததும் சடலங்கள் பரிபாடாவிற்கு கொண்டு வரப்பட்டன. சவ அடக்கம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை செய்து கொண்டிருந்தோம்.

சவ அடக்கம் செய்யும் இடத்தை விரல்களையும் பாதங்களையும் இழந்த சில தொழு நோயாளிகள் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்ததை நான் பார்த்தேன்.. அவர்கள் கதறி அழுது கொண்டிருந்தனர்.

நானும் மௌனமாக கதறினேன். ஆனால் வடிந்து கொண்டிருக்கும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னுடைய கணவனையும்  இரு மகன்களையும் இழந்த கிளாடிஸ் என்னையும் என் மனைவியையும் தேற்றினார் என்பதை என்னால் மறக்க முடியாது.

சில வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புவதற்கு முன்பாக மயூர்பஞ்ச் தொழு நோயாளிகளில் இல்லத்தில் ஒரு சிறிய கட்டிடத்தை திறந்து வைக்க கிளாடிஸ் என்னை அழைத்திருந்தார். அதன் பின்பு நான் டெல்லிக்கு சென்று விட்டேன்.

ஒடிசா மாநிலத்தின் தொழுநோயாளிகள் மத்தியில் ஆற்றிய பணிக்காக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய விருதான பத்மஸ்ரீ விருது 2005 ல் கிளாடிஸிற்கு வழங்கப்பட்டது. சமூக நீதிக்காக வழங்கப்படும் அன்னை தெரஸா நினைவு விருதை அவர் 2016 ம் ஆண்டு பெற்றார்.

கிளாடிஸ் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். அவரது மகள் எஸ்தருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. எப்போதெல்லாம் கிளாடிஸ் இந்தியா வருகிறாரோ அப்போதெல்லாம் வாய்ப்பிருந்தால் சந்திப்போம். 2010 ல்  என் உடல் நிலை சரியில்லாத தருணத்தில் என்னை நலன் விசாரிக்க சென்னை வந்திருந்தார்.

கடந்தாண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது ஒரு நாள் இடைவெளியில் அவரைப் பார்க்கத் தவறி விட்டேன்.

கிரஹாம் படுகொலைச் சம்பவத்தை என்னால் மறக்க இயலாது. என் ஆழ் மனதில் ஏற்பட்ட நிரந்தர வடு இது. எந்நாளும் அப்படியே நிலைத்திருக்கும்.

கிரஹாம், பிலிப், டிமோத்தி அமைதியாய் துயிலிலிருக்கட்டும்.

கிளாடிஸ், எஸ்தர் மற்றும் அவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்.

மனிதமும் கருணையும் அன்பும் வாழிய, வாழியவே . . .

ஆர்.பாலகிருஷ்ணன்


அடேங்கப்பா! என்னே வளர்ச்சி!!!!

நான் ரசித்து சிரித்த இன்னொரு பத்தாண்டு சவால் படம்.

டயர் கும்பிடு சாமிகள் ஹெலிகாப்டர் பயணிகளாய் மாறிய கதை


Wednesday, January 23, 2019

ரெஸ்ட் வேணும் மோடி, ப்ளீஸ்



கொஞ்ச நேரம் முன்னாடிதான் "மோடியின் டீ விற்காத காதை" எழுதினேன். 

இப்போ பார்த்தா 



"உணவு சமச்சேன், பாத்திரம் கழுவினேன்"

என்ற அடுத்த உடான்ஸை அவிழ்த்து விட்டுள்ளார். 

யப்பா மோடி, இப்படி அடுத்தடுத்து உங்களைப் பத்தியும் உங்க மோசடி பத்தியுமே எழுதிக்கிட்டு இருந்தா உங்க வானரப் படை அட்டகாசம் பத்தியெல்லாம் எப்போதான் எழுதறது?

பொய் சொல்றதிலிருந்து நீங்களும் ரெஸ்ட் எடுத்துக்குங்க!
உங்க டுபாக்கூர் பத்தி எழுதறதிலிருந்து நானும் ரெஸ்ட் எடுத்துக்கறேன். 

டீல் ஓகேயா?


டீ விற்காத மோடி – பழைய செய்தி




“மோடி டீ விற்றதாக சொன்ன செய்தி பொய்யானது. மக்களிடம் அனுதாபம் பெற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நாடகம்” என்று மோடியின் நாற்பதாண்டு கால நண்பரும், மோடி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று சில மாதங்கள் முன்பாக புகார் கொடுத்தவருமான பிரவீண் தொகாடியா கூறியுள்ளது பரபரப்பாக பரவிக் கொண்டிருக்கிறது.



இச்செய்தி ஒன்றும் புதிதல்ல.

பதினைந்து லட்ச ரூபாய் கோட் அணிந்து கொண்டு ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்ததாக மோடி சீன் போட்ட காலத்திலேயே “ மோடி டீ விற்ற மோசடிக் கதை”யை  ஒரு பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தியது நினைவுக்கு வந்தது.

மோடி டீ விற்றதாக சொன்ன காலக்கட்டத்தில் மோடி விற்றதாக சொல்லப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படவே இல்லை என்பதை அந்த பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்தி இருந்தார்.

இல்லாத ஸ்டேஷனில் விற்காத டீ யை யார் வாங்கிக் குடித்தார்களோ!!!!!

பத்திரிக்கையாளர் சொன்னதை நம்பாத அப்பாவி மக்கள் இப்போது மோடியின் நாற்பதாண்டு கால நண்பர் சொல்வதையாவது நம்பினால் சரி

Tuesday, January 22, 2019

அமாவாசையும் ஆதியோகியும்

பத்தாண்டு சவால் தொடர்பாக நான் பார்த்து ரசித்த இரண்டு படங்கள் நீங்களும் பார்த்து இன்புறுவதற்காக

அமாவாசையாக  இருந்து நாகராஜசோழனாக மாறியவர் கதை



நதிநீர் பாதுகாக்க மிஸ்ட் கால் கொடுக்கச் சொல்லிக் கொண்டே வனத்தை அழித்த கதை






திரிபுராவிலிருந்து திருநெல்வேலி . . .



களைகள் பரந்து வளர்ந்தால்
பயிர்கள்தான் நீக்கப்படும்.
பாவிகளின் ராஜ்ஜியத்தில்
புனிதர்களுக்கு இடமேது?

பொய்களின் பிம்பங்களுக்கு
புரட்சியும் புரியாது,
தியாகமும் தெரியாது.

கட்டுக்கதை பரப்பிக் கொண்டு
காட்டிக் கொடுக்கும் துரோகிகளுக்கு
வரலாறும் கிடையாது,
வாழ்வில் கொள்கையும் கிடையாது.

ஆட்சிப் பொறுப்பின் ஆணவத்தால்
அகற்றப்பட்டவர்
இன்று மீண்டும் எழுகிறார்.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
என்ற  என்றென்றும்
தேவைப்படும் தத்துவத்தை
முதலில் சாதித்தவரை
திரிபுராவில் வீழ்த்தியதாய்
நினைத்தார்கள்,
திருநெல்வேலியில் மீண்டு
வருகிறார் கம்பீரமாய் . . .

உயிரோடிருந்தால் 
பாரதி பாடியிருப்பான்
“ஆஹாவென்று எழுகிறது
யுகப் புரட்சி நாயகனின் சிலை”


Monday, January 21, 2019

போட்டோஷாப்பிற்கு இஸ்லாம் தோஷமில்லை


காவிகளைப் போல மோசடிப் பேர்வழிகள், வெட்கம் கெட்டவர்கள், அடுத்தவர் சாதனையை தங்களுடையது என்று காண்பித்துக் கொள்ள கூசாதவர்கள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று கிடைத்துள்ளது.

அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்காக மொட்டைச் சாமியார் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகளை பாரீர் என்று சங்கிகளின் பொய்களைப் பரப்புவதற்கென்றே உள்ள "போஸ்ட்கார்ட்" இணைய தளம் ஒரு படத்தை வெளியிடுகிறது.  






அவ்வளவுதான் அதை வைத்துக் கொண்டு ஆளாளுக்கு அந்த படத்தை பகிர்ந்து கொண்டு மொட்டைச் சாமியார் புகழைப் பரப்புகிறார்கள்.

கெட்டிக்காரனின் புளுகிற்கே இரண்டு நாட்கள் என்கிற போது மோசடிப் பேர்வழிகளின் புளுகு மட்டும் எவ்வளவு நாள் தாங்கும்?

வழக்கம் போல இந்த படத்தின் மர்மமும் அம்பலமாகி விட்டது. 

படத்தில் உள்ளது அலகாபாத்தே கிடையாது. அது மெக்கா.  ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபிய அரசு செய்துள்ள ஏற்பாடுகளின் புகைப்படம். 



தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த ஹஜ் யாத்ரீகர்கள் பதிவு செய்த புகைப்படத்தை அப்படியே அலகாபாத் என்று மாற்றி விட்டார்கள்.

காவிகள் எப்போதுமே இஸ்லாமை வெறுப்பார்கள். ஆனால் போட்டோஷாப் மோசடி செய்வதற்கு மட்டும் இஸ்லாம் தோஷம் இல்லை போலும்!