Wednesday, October 4, 2017

உனக்குப் பிடிக்காவிட்டால் என்ன?





நல்லவையெல்லாம்
நயவஞ்சகர்களுக்கு
பிடிக்கத்தான் செய்யாது!

மனதில் கருமை கொண்டவர்களுக்கு
வெண்மையின் தூய்மை
புரியத்தான் செய்யாது!

கலாச்சாரம் 
எதுவென்று அறியா
காட்டுமிராண்டிகளுக்கு
காதலின் சின்னம்
பிடிக்கத்தான் செய்யாது!

கழுதைகளுக்கு மட்டுமல்ல
சில காவிகளுக்கும்
கற்பூர வாசம் தெரியாது.

நீ கோட்டான் என்பதால்
அந்தக்குயில் கூவாதா என்ன?
அழகு மயில்தான்
ஆடாமல் போயிடுமா?

உன் பட்டியலில் இருப்பதோ
இல்லாமல் போவதோ
நீ விரும்புவதோ, இல்லை
விஷமென வெறுப்பதோ
அந்த உலக அதிசயத்திற்கு
ஓர்  பொருட்டல்ல.

ஆயிரம் கைகள் முயன்றாலும்
மறைக்க இயலா ஆதவனாய்
அந்த  அற்புத அழகு,
உன் அற்பத்தனத்தால்
அழிந்திடுமா என்ன?

உனக்கு பிடிக்காவிட்டால்
உலகிற்கும் பிடிக்காதா
விபத்தாய் பதவிக்கு வந்த
விபரீத சாமியாரே?
 
உன் பட்டியலில் இல்லாவிட்டால்
பார்க்க யாரும்
வரமாட்டார்களா என்ன?
பட்டியலில் இருந்ததால்தான்
பார்த்தார்களா இத்தனை நாள்?

உனக்கு முன்பும் இருந்தது.
உனக்குப் பிறகும் இருக்கும்.
காலத்தைக் கடந்த
அந்த
காதல் சின்னம்.

பி.கு : முன்னொரு நாள் தாஜ் மஹாலில் நானும் என் மகனும் எடுத்துக் கொண்ட புகைப்படம்.




4 comments:

  1. காவிகளுக்கும் கற்பூர வாசம் தெரியாது--->கம்யூனிச வல்லூறுகளுக்கு வன்முறையைத் தவிர எதுவுமே தெரியாது,புரியாது.

    ReplyDelete
    Replies
    1. காவிக் கயவர்களுக்கெல்லாம் கம்யூனிஸ்டுகளைப் பற்றிப் பேச அருகதையே கிடையாது

      Delete
  2. ஆயிரம் கைகள் முயன்றாலும்
    மறைக்க இயலா ஆதவனாய்
    அந்த அற்புத அழகு,
    உன் அற்பத்தனத்தால்
    அழிந்திடுமா என்ன?
    -----------> அப்படி என்றால் எந்த பீப்புக்கு (சிம்பு பாணியில்) கத்தனும்?

    ReplyDelete
    Replies
    1. அதனால்தானே உன்னைப் போன்ற தரங்கெட்ட கமெண்டு போடும் கயவர்கள் காவிகள் என்பது தெரிய வருகிறது

      Delete