Tuesday, October 31, 2017

சிவப்பிடம் நடுங்குது காவி





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பாக காவிகளின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யைச் சேர்ந்த சில விடலைப் பசங்க, செங்கொடியை எரித்து கலாட்டா செய்திருக்கிறார்கள். மார்க்சிஸ்டுகளின் பொறுமையை சோதித்து அதன் மூலம் பெரும் கலவரத்திற்கு வித்திட காவிக்குரங்குகள் குட்டிகளை அனுப்பி ஆழம் பார்த்துள்ளன.

கம்யூனிசம் செத்து விட்டது. கம்யூனிஸ்டுகள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் பேசுகிற காவிகள் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் முன்பாக கலாட்டா செய்கிறார்கள். காவல்துறை அவர்களுடைய எடுபிடிகளாக இருக்கிற இடங்களில் தாக்குதலும்  நிகழ்த்துகிறார்கள்.

புதுடெல்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகம்,
புவனேஸ்வர்,
கரீம் நகர்
டேராடூன்,
உடுப்பி,
புதுச்சேரி,
லூதியானா

என்று பல இடங்களில் அராஜகத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். 

கேரளத்தில் இவர்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை என்றதும் பித்து தலைக்கேறி விட்டது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏன் அஞ்சுகிறது காவி?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் முகமான பாஜகவும் செய்கிற அட்டூழியங்களை உறுதியாக அம்பலப்படுத்தி வருகிற ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

மோடி ஆட்சியின் முழுமையான தோல்வியை தோலுரித்து வருகிற ஒரே கட்சி சி.பி.ஐ(எம்).

பாஜக விற்கு எதிரான மற்ற முதலாளித்துவக் கட்சிகளை சமரசம் மூலமாகவோ அல்லது வழக்கு பதிவு எனும் மிரட்டல் மூலமாகவோ மௌனமாக்க முடிகிற பாஜகவால் நெருங்க முடியாத  நெருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

அதனால்தான் சிவப்பைக் கண்டு அஞ்சுகிறது காவி.
வன்முறை மூலமாவது அவர்களை அடக்க முடியுமா என்று முயல்கிறது.
அந்த முயற்சி காவியின் பயத்தை, நடுக்கத்தைத்தான் காண்பிக்கிறது.
அந்த பயம் எனக்கு பிடிக்கிறது. 
 

No comments:

Post a Comment