Monday, October 30, 2017

மேலாண்மை மறைந்தார்



எளிய மக்களின் பிரச்சினைகளை எளிமையான, அதே நேரம் வலிமையான வார்த்தைகளில் வடித்தெடுத்த சாகித்ய அகாடமி விருது பெற்ற அற்புதமான எழுத்தாளர் தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு  நாகப்பட்டினத்தில் நடைபெற்றபோது  அவரைப் பார்த்ததும் அம்மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.

செவ்வணக்கம் தோழர் மேலாண்மை பொன்னுசாமி.


1 comment:

  1. அவரைத் தோழராக மட்டுமே கொள்வது முழுமையற்ற பார்வை. அவரின் சிறுகதைகள் பல நான் வாசிக்கும்போது எனக்குப்பட்டது: பாட்டாளி வர்க்கம் படும் பாட்டை உணர்வுப்பூர்வமான சொற்களில் காட்டும் இக்கதைகள் இன்றைய தமிழ் உரைநடை இலக்கியத்துக்கு மிக அழகான அணிகலன்களாகத் திகழ்கின்றன. அன்னாரின் தமிழ் இலக்கியத்தொண்டு என்னாளும் நினைவில் நின்று போற்றப்படும். வந்தார் இருப்பதில்லை. ஆனால் அவர் விட்டுச்சென்றவை இருந்து மகிழ்வூட்டும்.

    ReplyDelete