Thursday, August 25, 2016

ஜாக்கிரதை ஜட்ஜூங்களா, எங்க கிட்டயேவா?




இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆனாலும் இவ்வளவு தைரியம் கூடாது. 

சகிப்புத்தன்மை வேண்டும், அதிகார துஷ்பிரயோகம் கூடாது என்று சர்வ சக்தி படைத்த மகா கனம் பொருந்திய அம்மாவிற்கே அறிவுரை வழங்கும் அளவிற்கு ஆணவமா? 

அவதூறு வழக்கு போடுவதை அவதூறு செய்வதா?

கோட்டு போட்டதால் மோடியின் பெயர் கின்னஸில் வருமென்றால் வழக்கு போட்டு சாதனை படைப்பதை தடுக்கப் பார்க்கிறார்களா?

என்ன தைரியம் அவர்களுக்கு?

அவர்கள் என்ன சென்னைப் பக்கம் வர மாட்டார்களா? இல்லை தமிழகத்தில் கால் வைக்கவே மாட்டார்களா?

சுப்ரமணிய சாமிக்கும் சேஷனுக்கும் தமிழகத்தில் கொடுக்கப்பட்ட ராஜமரியாதை பற்றி தெரியாதா அவர்களுக்கு?

நீதிபதிகள் வீட்டிலேயே கஞ்சா வைத்து வழக்கு போடத்தான் முடியாதா?

ஜெ வுக்கு கடும் கண்டனம் என்று தலைப்புச் செய்தி போடுமளவிற்கு பத்திரிக்கைகளுக்கு வீரம் வந்து விட்டதா?  தினகரன் தீ அக்காலம். இக்காலத்தில் என்னவென்று காத்திருங்கள்.

உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் இனியும் இப்படி பேசினால் தனித் தமிழ்நாடாக பிரியும் முடிவை அம்மா எடுக்க வேண்டியிருக்கும். ஜாக்கிரதை.

பின் குறிப்பு :  பிரபல "நடுநிலை" பதிவர் போல நீதிபதிகளை "விமர்சனம்" செய்வது போல எழுதினால் அவதூறு வழக்கு வராது என்று தெரியும். இப்பதிவிற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு வாய்ப்பு இருக்கிறதா? 

3 comments:

  1. Judge chellamaa KandiKira maathiri kandipaanga aana oru poi case aiyum dismiss Panna maatanga.

    ReplyDelete
  2. Yes.chances are there.

    ReplyDelete