Thursday, August 11, 2016

அங்கியும் ஒரு "மக்கள் முதல்வர்"




முதலமைச்சராக பதவியில் நீடிக்க முடியாதவருக்கு "மக்கள் முதல்வர்" என்ற அடைமொழியை அதிமுக அடிமைகள் அளித்தார்கள். 

அந்த "மக்கள் முதல்வர்"  பட்டத்தை இப்போது புதுவை ரங்கசாமி கையில் எடுத்துக் கொண்டார்.

நேற்று புதுவை வழியாக கடலூர் சென்றோம். அவரது பிறந்த நாள் கடந்து போயிருந்தது.  வழக்கமான அளவில் பேனர்கள் கண்ணில் படவில்லை (ஒரு வேளை எடுத்து விட்டார்களா என்று தெரியவில்லை) இருந்தாலும் கண்ணில் பட்ட அனைத்து பேனர்களிலுமே அவரை "மக்கள் முதல்வர்" என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.

ஒரு பேனரில் பார்த்த வாசகம்

நான் வருவேன்னு சொல்லு
திரும்பி வருவேன்னு சொல்லு
மகிழ்ச்சி

நாராயணசாமி சட்டமன்ற தேர்தலில் போட்டி போட தங்கள் பதவியை ராஜினாமா செய்ய எந்த எம்.எல்.ஏ வும் தயாராக இல்லை என்ற செய்திக்கும் இந்த வாசகங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

பின் குறிப்பு " மேலேயுள்ள படம் இணையத்திலிருந்து எடுத்தது. 

 

No comments:

Post a Comment