Wednesday, March 19, 2014

விஜயகாந்த் ஒலிப்பதிவாளர்களுக்கு ஆஸ்கார் கொடுங்கப்பா?




விஜயகாந்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை தொலைக்காட்சியில்
பார்க்கிற போது  எழுந்த உணர்வுதான்  தலைப்பு.

அவர் கூட்டங்களில் பேசுவது புரிவதேயில்லை. குழறி குழறி
திண்டாடிப் பேசுகிறார். கேட்பவர்களையும் திண்டாட வைக்கிறார்.

ஆனால் திரைப்படங்களில் நாம் கேட்ட விஜயகாந்த் குரலா இது?
கேப்டன் பிரபாகரன், ரமணா உள்ளிட்ட எவ்வளவோ படங்களில்
மிகவும் கம்பீரமாக ஒலித்த குரலா இது?ஆனால் 'ழ' எப்போதுமே
சிக்கல்தான். அது வேறு கதை.

ஆக இப்படி குழறுகின்ற விஜயகாந்த் குரலை கம்பீரமாக கேட்க வைத்த
அவருடைய ஒலிப்பதிவாளர்கள் உண்மையிலேயே பாராட்டுக்கு
உரியவர்கள்.

ஆக அவர்களுக்கு ஆஸ்கார் விருது கொடுப்பதுதான் முறையாக
இருக்கும்.

4 comments:

  1. ஆஸ்காரை விஜயகாந்த்க்காக தமிழ்நாட்டுக்கு ஓட்டி வர முடியாது.

    ReplyDelete
  2. இவரையும் நம்ப நாலுபேர் இருக்கிறார்கள், என்ன செய்ய. விதி.

    ReplyDelete
  3. படத்திற்காக குரல் டப்பிங் நல்ல தெளிவாக இருக்கும் போது தான் விஜயகாந்த் டப்பிங் பேசிஇருப்பார் பொல தெரிகிறது.

    மகாராசா

    ReplyDelete
  4. சையத் சார், குறைந்தபட்சம் ஒரு அம்பாசிடர் காராவது ஓட்டலாமே

    ReplyDelete