Wednesday, December 11, 2013

இறந்த பின்னும் வாழ்கிறாய்





உயிரோடு இருந்தது சொற்ப காலம்
ஆனால் அழிவின்றி
வாழ்கிறாய் இன்னும் கூட,
வாழ்வாய் இனியும் கூட.
எங்கள் இதயங்களில்.

ஆயிரம் ஆயிரமாய்
கவிஞர்கள் வந்தாலும்,,
கோடி கோடியாய்
கவிதைகள் மலர்ந்தாலும்
எல்லாமே நிலைப்பதில்லை.
நீ நிலைத்துள்ளாய்.

தேசத்தை பாடியவனை
தேசம் மறக்காது.
பெண்மையை போற்றியவனை
பெண்ணினம் மறக்காது.
புரட்சியை பாடியவனை
புது யுகம் மறக்காது.

அனைத்தையும் பாடிய
உன்னை
அகிலமே மறக்காது.


No comments:

Post a Comment