Tuesday, December 17, 2013

வீர வணக்கம்





மூன்றாண்டுகளா ஓடியுள்ளது?
மூன்று யுகங்கள் அல்லவா நகர்ந்துள்ளது!
தியாகத்தின் சிகரத்தை
போராட்டத்தின் அடையாளத்தை
தோழமையின் வடிவத்தை
தலைமையின் உதாரணத்தை
வழிகாட்டும் தோழரை
இயக்கம் மட்டுமா இழந்தது?
ஏழை எளிய மக்களும்தான்.

சிந்திய கண்ணீரும்
வெளிப்பட்ட கதறல்களும்
உயர்ந்த முஷ்டிக்களும்
பொன்மலையில் துவங்கிய
உங்கள் பயணம்
மரணத்தில் முடியவில்லை,
மக்கள் இதயத்தில்தான்
என சொல்லாமல் சொல்கிறதே.

தியாகமும் போராட்டமும்
இனியும் எங்களை
எந்நாளும் வழி நடத்தும்.
கையை உயர்த்தி
குரலை எழுப்புகிறேன்

“வீர வணக்கம் தோழர்”

1 comment: