Wednesday, June 19, 2019

மாலனுக்கு ஏன் எரியுது?



தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்கள் (ஓபிஎஸ் மகன் நீங்கலாக) நேற்று பதவியேற்கையில் அழுத்தமாக தடம் பதித்து இந்தியாவையே நேற்று தமிழகத்தின்பால் திரும்ப வைத்துள்ளார்கள்.

"தமிழ் வாழ்க"  என்று முழக்கமிட்டால் தமிழ் எதிரிகளுக்கு கோபமோ பதட்டமோ வந்தால் அது இயல்பானது. "தமிழ் வாழ்க" என்ற முழக்கம் அவர்களின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பத்திரிக்கையாளர் என்று சொல்லப் படுகிற மாலனுக்கு ஏன் "தமிழ் வாழ்க" என்ற முழக்கத்தின் மீது அவ்வளவு எரிச்சல்?

"எந்த மொழியில் கையெழுத்திட்டார்கள்? அதெல்லாம் அவைக் குறிப்பில் பதியாது தெரியுமா?"

என்றெல்லாம் ஏன் புலம்பிக் கொண்டே இருக்கிறார்?

புரியவில்லையா?

சிம்பிள்

தேர்தலுக்குப் பிறகும்  பேக்கரி டீலிங் தொடர்கிறது.
வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக இன்னும் நன்றாகவே வாலாட்டுவார்.  

Tuesday, June 18, 2019

திருப்பதி நாராயணா தேவையா இது!


சங்கி திருப்பதி நாராயணனுக்கு செம பதில் இது.

அந்தாளோட திமிரால அவங்க கோடீஸ்வர எம்.பிக்கள்தான் அசிங்கப் ப

திருப்பதி பொய்- கேவல பாஜக


பாஜக வதந்தித் தொழிற்சாலை பொறுப்பாளர் மது கிஷ்வர் ஒரு புதிய புரளியை உலவ விட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டி இந்துவாக மாறி விட்டார் என்ற புரளி எடுபடாதா கடுப்பின் விளைவு போல.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக யெஹோவா வின்சென்ட் சுப்பாராவ் என்ற கிறிஸ்துவரை நியமித்து விட்டார். இது அடுக்குமா என்று ஓவராக ஒப்பாரியிட முட்டாள் சங்கிகளும் ஜால்ரா தட்ட 

பாவம் அந்த சுப்பாராவ்!

அய்யா நான் யெற்றம் வெங்கட சுப்பாராவ், இந்துதான். 
என்று எல்லா ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

இவரது நியமனத்தைக் கண்டித்து இன்போசிஸ் சுதா மூர்த்தி ராஜினாமா செய்து விட்டார் என்ற இன்னொரு  கதை வேறு.

முந்தைய அரசின் நியமனம் என்பதால் பதவி விலகியதாகவும் இந்த அரசு பதவி அளித்தாலும் ஏற்கத் தயாராக இருப்பதாக அவரும் அறிவித்து விட்டார்.

இதெல்லாம் பாஜக தவறில்லை. 

கேவலமான அக்கட்சியை ஆதரிக்கும் ...................... தவறு 


Monday, June 17, 2019

அமித் ஷா புத்தி அவ்வளவுதான்

“பாகிஸ்தான் மீது மற்றுமொரு தாக்குதல். அதே விளைவு” என்று குதூகலப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்தியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. 

வெற்றியைக் கொண்டாடுவதில் பிரச்சினை இல்லை. அதை அரசியலாகப் பார்த்து ‘தேசபக்தியை’ வளர்ப்பதுதான் அபாயம். 

அப்படிப் பார்த்தால் அபத்தமான முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும். 
இது வரை இரு நாடுகளுக்கும் இடையே நடந்திருக்கும் 59 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 12 இலும் இந்தியா 9இலும் வென்றிருக்கின்றன.

131 ஒரு நாள் போட்டிகளில் 74 இல் பாகிஸ்தானும், 56 இல் இந்தியாவும் வென்றிருக்கின்றன.

பாட்டில் தோற்று விட்டால் இந்தப் பாண்டிய நாடே எனக்கு அடிமை என்கிற மன நிலையிலிருந்து மீளவில்லை இந்த வித்யாசாகர்கள். 

இதில் விசேஷம் என்னவென்றால் கிரிக்கெட் வீரர்கள் அந்த மேட்சை மற்றொரு போட்டியாகத்தான் பார்த்திருக்கிறார்கள். 

ஆட்ட களத்திற்குள் செல்லும் முன் அணி சகாக்களிடம் 
என்ன சொல்வீர்கள்  என்று தோனியைக் கேட்ட போது அவர் சொன்னது: Guys, enjoy the game. 

அதாவது விளையாட்டை மகிழ்ச்சியாக
அனுபவித்து ஆடுங்கள்.

_பத்திரிக்கையாளர் Front line விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து..._

எல்லாம் சரிதான். ஆனால் அமித்ஷாவுக்கு புத்தி அவ்வளவுதானே!

Sunday, June 16, 2019

அழிவின் விலை 1500 கோடி ரூபாய்


தூத்துக்குடி ஸ்டெரிலைட் மூடப்பட்டுள்ளதால் 1500 கோடி ரூபாய் லாபம் குறைந்துள்ளதாக வேதாந்தா அகர்வால் புலம்பியுள்ளார்,

இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்கிறதே என்று முதலைக் கண்ணீர் வேறு.

இவர் லாபம் குறையாமல் இருக்க ஒரு ஊரே அழிய வேண்டுமா?

1500 கோடி ரூபாய் அகர்வாலுக்கு.
மக்களுக்கு 
அழிவுதான்


Saturday, June 15, 2019

புளிச்ச மாவு பிரச்சினை - வருத்தம்தான்

புளிச்ச மாவு பிரச்சினை காரணமாக ஜெமோ சிறு காயம் அடைந்தது வருத்தம்தான்.

அவரது வாய் எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை அழகியல் அனுபவமாக எடுத்துக் கொள்வார் என்று நம்பினேன்.

சிறு காயமாக இருந்தாலும் போலீஸ் கேஸை ஸ்ட்ராங் ஆக்க மருத்துவமனையில் படுத்துக் கொண்டு கொலை முயற்சி போல பில்ட் அப் கொடுத்து பதிவு எழுதியதிலும் அந்த வருத்தம் போய் விட்டது.


Friday, June 14, 2019

சாம்பலாகித்தான் மீளுமோ வங்கம்?



மேற்கு வங்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. “பேய்க்கும் பேய்க்கும் சண்டை”  என்பது போல ஏற்கனவே பாஜக குண்டர்களுக்கும் திரிணாமுல் குண்டர்களுக்கும் இடையே வெட்டு குத்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் அதற்கு ஆதரவாக மற்ற தரப்பினரும் களமிறங்க, அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு நசுக்க மம்தா அம்மையார் முயற்சிக்க மாநிலம் முழுதுமே பதட்டத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது.

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல மேற்கு வங்கம் இனிதான் உயிர்த்தெழும் போல!

எண்ணெய்ச்சட்டியிலிருந்து எரியும் அடுப்பில் குதித்த மூடத்தனத்தை இப்போது வங்க மக்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் பக்கம் நிற்கும் தோழன் மார்க்சிஸ்ட் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் வருவார்கள்.